வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

மனிதனுக்கு  மனிதன்  சொன்னால்  நம்ப மாட்டான்
கடவுள் சொன்னது  என்றாலே  நம்புவான்
கொடுங்  கோர கொடிய செயல்கள்  புரிந்தவர்களுக்கு
ஆதிகாலத்தில்  உலகெங்கும்  கடுமையான  தண்டனைகள்
மனிதாபிமானம் கடந்து வழங்கப்பட்டது நம்  அரசர்கள்
அன்று கழுவில்  ஏற்றி கொன்றார்கள்  அதுவும்  கடவுள்
சொன்னதே என்றார்கள்  பின்  விதவைகளை  தீ குண்டத்துக்குள்
தள்ளி  கொன்றுவிட்டு  அதை  உடன்கட்டை ஏறுதல்  என்று
பெருமையாக  பேசினார்கள்  இந்த  கொடுமையை  எதிர்த்து
போராடி வெற்றி கண்டவர்  ராஜாராம் மோகன்ராய் .
மறுமலர்ச்சியை  புதிய  சிந்தனையை  ஆராய்ந்து  வரவேற்க வேண்டும்
என்றோ  எவரோ  அன்றைய  சூழலுக்கு சொன்னதை  அறிவியல் 
வளர்வுகண்ட  நாட்களிலும்  கடவுள்  சொன்னது என்று  கொண்டாடுவது
கற்றோருக்கு  இழுக்கு

 நெஞ்சில்  ஈரம்  இன்றி  தப்பு செய்தான் 
என்ற காரணத்துக்காக  கழுத்தை  அறுப்பதை  எக்காரணத்தை கொண்டும்
ஈவு  இரக்கம்  கொண்டோரால்  ஏற்க  முடியாது  சிறையில் அடைத்து
சிந்திக்க செய்தலே  கொடியவனுக்கு  கொடுக்கும்  தண்டனை
எத்தனை  கழுத்துக்களை  அறுத்தும் என்ன பயன்  தப்பு  செய்பவன்
பயமின்றி  செய்துகொண்டே இருக்கின்றான்  வெட்டும் நாட்டில் இவ்வாண்டு
 மட்டும் 54 பேர்  பலி தம்மை புனிதர்கள் என்று சொல்வோர்
விடுமுறை கிடைத்தவுடன் அண்டை நாடுகளுக்கு சென்று  சகல  அசுத்த  களிப்புகளும்
கொண்டாடிவிட்டு  பின்  தனது  நாட்டுக்குள்  நுழையும் போது
தூய்மை  கொண்டாடுவார்கள் - ஏழை நாடுகளிலிருந்து  வேலைக்கு
அழைத்துவிட்டு  பெண்களை  கற்பழிப்பது  கொடுமைப்  படுத்துவது
எதையும் முறைப்படி ஆழமாக  ஆராயாது  வெட்டியபின்  சுற்றவாளி
என கண்டவுடன்  போன  உயிரை  மீட்டு கொடுப்பார்களா
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக