அடியேன் சிந்திப்பில் மலர்ந்த பாடல்
தொகையாறு
புது மலர்கள் மலர்வதுந்தன் கையாலே
புது உலகும் விரிவதுந்தன் கையாலே
நீ அழுதால் உலகம் அழவேண்டும் தோழா
நீ அழுதால் உலகம் அழவேண்டும்
நாளெல்லாம் அலையாக ஓயாது வந்து உழைக்கின்றாய்
ஒரு நாழிகையேனும் நீ நிலையாக நெஞ்சம் மகிழவில்லை
உன்குருதி குடித்தே ஊர்மெச்ச வாழுகின்றார் ஆளுகின்றார்
உன்னையுண்ணும் முதலையென முதலாளி பேர்கொண்டோர்
காடு சூழ்ந்த நிறமாக உன் வீடு கிடக்குதங்கே கிடக்குதங்கே
ஆதவனின் விழிப்பாக ஆளுபவர் மாளிகையிங்கே இங்கே
பொங்கியெழு புது உலகம் உன்னை கண்டு விழிக்கட்டுமே
உன் வேர்வைக்குத் தகுந்தபடி நியாயப் படி அளக்கட்டுமே
செந்தமிழர் நிலத்தினிலே உழைப்பாரை நிந்திப்பதா நிந்திப்பதா
செந்தோழர் கண்ணீரில் மிதப்பதுவும் நீதியாகுமா நியாயமாகுமா
ஆள்வோரே பெரியோரே அணைத்து காக்க வாருங்கள் வாருங்கள்
அகிலம் வாழ உழைப்பவர்கள் நல்லபடி வாழட்டுமே வாழட்டுமே
செங்கவி
ம.இரமேசு
தொகையாறு
புது மலர்கள் மலர்வதுந்தன் கையாலே
புது உலகும் விரிவதுந்தன் கையாலே
நீ அழுதால் உலகம் அழவேண்டும் தோழா
நீ அழுதால் உலகம் அழவேண்டும்
நாளெல்லாம் அலையாக ஓயாது வந்து உழைக்கின்றாய்
ஒரு நாழிகையேனும் நீ நிலையாக நெஞ்சம் மகிழவில்லை
உன்குருதி குடித்தே ஊர்மெச்ச வாழுகின்றார் ஆளுகின்றார்
உன்னையுண்ணும் முதலையென முதலாளி பேர்கொண்டோர்
காடு சூழ்ந்த நிறமாக உன் வீடு கிடக்குதங்கே கிடக்குதங்கே
ஆதவனின் விழிப்பாக ஆளுபவர் மாளிகையிங்கே இங்கே
பொங்கியெழு புது உலகம் உன்னை கண்டு விழிக்கட்டுமே
உன் வேர்வைக்குத் தகுந்தபடி நியாயப் படி அளக்கட்டுமே
செந்தமிழர் நிலத்தினிலே உழைப்பாரை நிந்திப்பதா நிந்திப்பதா
செந்தோழர் கண்ணீரில் மிதப்பதுவும் நீதியாகுமா நியாயமாகுமா
ஆள்வோரே பெரியோரே அணைத்து காக்க வாருங்கள் வாருங்கள்
அகிலம் வாழ உழைப்பவர்கள் நல்லபடி வாழட்டுமே வாழட்டுமே
செங்கவி
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக