புதன், 13 ஆகஸ்ட், 2014

முடிவு என்ன ?

ஒரு கால  எல்லைக்குள்  பணியை முடிக்கவேண்டும்
தங்க,  வாய் திறக்க  நேரமில்லை  வேலை வேலை
அதுவே எனது வேலை  கடிகாரம்  சுழலுது  அதனில்
விரைவாய்  நான் சுழல்கிறேன்  பணி  பணி  பணி
இறுதியில்  என்ன காணப்போகின்றேன்   சுடலையை  மட்டுமே
சுறுசுறுப்பும்  ஒரு நாள் சுடலை சோம்பியவனும் சுடலை

"கல்பொருது  இரங்கும் மல்லல்பேராற்று நீர் வழிப்படும்
புனைபோலே  ஆருயிர் முறையே  வழிப்படும் என்பது
திறவோர் காட்சியின் தெளிந்தனம்  ஆதலின் மாட்சியில்
பெரியாரை வியப்பதுமிலவே  சிறியாரை இகழ்வது
அதனிலுமிலவே "

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக