பொய்த் திரைக்குள்
எழுதாத சட்டத்துள் மாட்டித்துடிக்கும் மீனானாய்
உப்பும் காரமும் இரசித்து உருசித்துண்ணும் உயிர் நீ
நீயும் விரகதாபத்தில் வெந்து மடிவதை எல்லோருமுணர்வார்
உன் தாபத்தை தீர்க்க நற்துணை நாட்ட தடவிச் சொல்லியும்
தம்முன்னர்கள் சொல் கேளாது வீண் பிடியில் இருக்கின்றாய்
மாயாவுலகில் மாய்கிறது உன் ஆவி உனக்கு புரியவில்லையா
உள்ளமும் உணர்வும் உனக்குமுண்டு பின் ஏன் ஒளிப்பு
உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளும் அறிவாளி நீ
மல்லிகை மண்ணைப் பிரிந்தால் வாடாது வதங்காது
மற்றோர் மண்ணில் நடப்பட்டு மணம் பரப்புகின்றதே
மண்ணில் உடலெடுத்தால் இன்பமும் துன்பும் பொதுவே
இழந்ததையே எண்ணி இன்ப வாழ்வை தொலைக்காதே
தங்கமேனியை கருக விடுவதால் யாருக்கு என்ன பயன்
கோயிலில் சூடிய மாலை பின் பூசையறையில் சூட்டப்படுகின்றதே
நீ இழந்தது மட்டுமே நல்லதல்ல பூமியில் நல்லவைகள் நிறையவுண்டு
நீ கொண்டது மட்டுமே சாமியில்லை நல்ல சாமிகள் வெளியிலுமுண்டு
சிந்தி சிந்தி நல்ல முடிவெடு எல்லாம் மாயை நீயும் மாயை நினைப்பும் மாயை
அறிந்தது எல்லாம் அறிந்தும் ஏன் உன்னை பொய்த் திரைக்குள் மறைக்கின்றாய்?
ம.இரமேசு
எழுதாத சட்டத்துள் மாட்டித்துடிக்கும் மீனானாய்
உப்பும் காரமும் இரசித்து உருசித்துண்ணும் உயிர் நீ
நீயும் விரகதாபத்தில் வெந்து மடிவதை எல்லோருமுணர்வார்
உன் தாபத்தை தீர்க்க நற்துணை நாட்ட தடவிச் சொல்லியும்
தம்முன்னர்கள் சொல் கேளாது வீண் பிடியில் இருக்கின்றாய்
மாயாவுலகில் மாய்கிறது உன் ஆவி உனக்கு புரியவில்லையா
உள்ளமும் உணர்வும் உனக்குமுண்டு பின் ஏன் ஒளிப்பு
உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளும் அறிவாளி நீ
மல்லிகை மண்ணைப் பிரிந்தால் வாடாது வதங்காது
மற்றோர் மண்ணில் நடப்பட்டு மணம் பரப்புகின்றதே
மண்ணில் உடலெடுத்தால் இன்பமும் துன்பும் பொதுவே
இழந்ததையே எண்ணி இன்ப வாழ்வை தொலைக்காதே
தங்கமேனியை கருக விடுவதால் யாருக்கு என்ன பயன்
கோயிலில் சூடிய மாலை பின் பூசையறையில் சூட்டப்படுகின்றதே
நீ இழந்தது மட்டுமே நல்லதல்ல பூமியில் நல்லவைகள் நிறையவுண்டு
நீ கொண்டது மட்டுமே சாமியில்லை நல்ல சாமிகள் வெளியிலுமுண்டு
சிந்தி சிந்தி நல்ல முடிவெடு எல்லாம் மாயை நீயும் மாயை நினைப்பும் மாயை
அறிந்தது எல்லாம் அறிந்தும் ஏன் உன்னை பொய்த் திரைக்குள் மறைக்கின்றாய்?
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக