ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஒரு படைப்பாளி  வரைந்த   (படைப்பு ) மயில்  < விமர்சகர்   பார்வையில்   அதன் தோகை  அழகாக இருக்கும்  இல்லை   கால்கள்  மட்டும்   விமர்சனம்  பெறலாம்   சிலருக்கு  கண்கள்  பெரிதாகத்தோன்றும்  படைத்தவனுக்கே  மொத்தமும்  புரியும்  இதை  யானைக்கு  ஒப்பிட்டே சொல்வதுண்டு   சற்று  மாறுதலுக்காக  மயிலென்கிறேன் -   உடன்பாடில்லாத  கருத்து  என்ற போதும் மறுப்பை  நாகரிகமாகப்   பணிவுடன் பண்புடன்  தெரிவிப்பவரே   கற்றவர் என்ற சொல்லுக்கு தகுதியானவர்  அநாகரிமாக  விமர்சிப்பவர்  அநாகரிகமானவரே - எழுதும்போது  நாகரிகமான  சொற்களை பயன்படுத்தல் வேண்டும் இல்லை  எழுதாமல்  இருப்பதே  நல்லது


அன்று பெரும்பான்மை  யாழ் வாசிகளை  ஆட்டிப்படைத்த நடிகன்  சிவாஜிகணேசன்,  தூங்கும்  நேரம் போக  மிகுதி  நேரத்தில்  அவரின்  அழகுமுகம்  காவித்திரின்தோரே  அதிகம்,  உடலுழைப்பை 
நல்கியோரே  எம்ஜிஆர்  இரசிகர்கள்  என  எழுதாத  கருத்து  நிலவியது   -   பெற்றோருடன்
 சென்று ஒரு  நாளும் எம் ஜி ஆர்  படம் பார்த்ததில்லை  ஒரு முறை சிறிய வயதில்  மாமாவும்
அவரின் நண்பரும்  லிடோவில்  ஓடிய சந்திரோதயம்  படத்துக்கு  அழைத்துச்  சென்றார்கள்  ஆனால்  அவர்கள்  சிவாஜியின்  தீவிர இரசிகர்கள்  முதல்நாள்  முதற்காட்சி  தரிசிக்கும்  இரசிகர்கள்   ஏன்தான்  என்னை  அப்படத்துக்கு  அழைத்துச்சென்றார்களோ அறியேன்   ஆனால்  முதல் முதல்  எம்ஜிஆரின் 
அழகு முகம்  கண்டு பரவசமானேன்  என்பது  உண்மை  பின்  16 வயதில்  பக்கத்தூரில்  தொலைக்காட்சியில்   காட்டப்பட்ட    பாசம்   படத்தைப்   பார்த்ததிலிருந்து   அவரின் கேள்விகளும் நியாயங்களும்  ஆழமாக  நெஞ்சிற் பதிய  தீவிர  எம் ஜி ஆர்  இரசிகனானேன்   ஆயினும்  சிவாஜியின்
நடிப்பையும் போற்றுபவன் .

இது சாதா  எழுத்தாளர்களுக்கு  மட்டுமில்லை , உலகம்  கொண்டாடும்  பாரதியாரே  எழுதியபடி  இருந்ததில்லை   பெண்விடுதலை சுதந்திரம்  பற்றி அவர்போல் யாராவது எழுதியிருப்பார்களா  என்று
தெரியவில்லை  ஆனால் அவர்வீட்டில்   மனைவி மகளை  எப்படி  நடத்தினார்  என்பதையறிந்தால்
வியப்புண்டாகும்.   ஆக   எழுதுபவர்கள்  எந்நேரமும்  சொல்லியபடி அனைத்து  விடயங்களிலும்
தங்களை  இட்டுநிரப்புவார்கள்  என்று  எதிர்பார்த்தல்   ஏமாற்றம்  தரும்.  கருத்தை  மட்டும் கொள்வோம்,   மூலம் நோக்காதே  என்கின்றார்கள்  மூதாதையர் (நதி மூலம்  ரிசி மூலம்)  நல்லாயிருக்கா  பருகு  போயிட்டேயிரு  எங்கு அவர்  அது  எப்படி  என்று  கேள்வி கேட்டால் குமட்டல்  வரும்.   உணவுவிடுதியில்   உண்டாயா சுவையாக  இருந்ததா  கையைக்  கழுவு  காசைக்கொடு வெளியேறு  நிம்மதி   விடுத்து  எப்படி  ஆக்கியவர்கள்  நிலை  என்று  குசினியை  எட்டிப்பார்த்தால் அவர்கள்  நிற்கும் கோலம்  அசைவுகள்  அருவருப்பை உண்டாக்கலாம்  உண்டது  மேலும் கீழும் சுழரலாம் - அடிநோக்கின் குடி கெடும் .

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக