வியாழன், 11 செப்டம்பர், 2014

கடிவாளக் குதிரை  மனிதர்கள்  நேர்வழி
அலைபாயும்  எண்ணங்கள் வாழ்க்கை
எங்கேயோ எதற்கோ  அழுகின்றது  மனம்
வெளியில் சொல்ல முடியாத  வேகல்கள்
உள்ளே நோகும் வலிகள்  உயிரை  இடிக்கும்
சில்லாறை  வார்த்தைகள்  மழைச் சேறாகும்
கல்லறை  போகும்வரை  குழப்பமே  வாழ்வு
ஒடிக்கும் போது அழுவதில்லை  மலர்கள்
சிறிது காலத்தில்  வாடி மடியும் மணங்கள்
பொழுதோடு எழும் புள்ளினங்கள் நம்பிக்கை
வீண்போகாத  நம்பிக்கை  உணவுண்டு அவைகளுக்கும்
என்ன நம்பிக்கை  மீனவருக்கு  இன்று  கிடைக்குமா
குடும்பம்  நடக்குமா  குதூகலம்  பிறக்குமா
தந்தியில்லா  வீணை  அவ்வப்பொழுது அலறுகிறது
கிழிந்த கந்தற்  பாலைவனம்  ஊளைச்சதை  உவர்ப்புநீர்
நாளைப்பொழுது  நரிகளுக்கும் சேர்த்தே
வன்மானும்  வாடுவதுண்டு,  எல்லா  நேரமும்
எல்லோர்க்கும்  சித்திப்பதில்லை
பொன்னிறக்  கரங்கள்  ஏந்தும்  அமுதம் 
உள்ளத்தில்  நஞ்சு  வாங்கியுண்பார்  யார்
உப்பில்லா  கஞ்சி  உள்ளத்தில்  அன்பு 
ஓடுகிறார்  குடிப்பதற்கு.

ம.இரமேசு   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக