ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

வங்கம் மேவும் சங்கம்  கண்டவளே
வாரியணைக்கையில்  வழுக்கி விழுபவளே
தங்கம் நீ  உன் தரத்துக்கு இணையேது
பங்கம்  வருங்காலும்  பனிக்காது
நெஞ்சம்  நிமிர்ந்து  நிற்பவளே
துஞ்ச மறந்தே  துதிக்கின்றார்
உன்னைத்   தொட்டு  மகிழும்  காதலர்தாம்
மஞ்சம்  விரித்து  உன்னைக்   கட்டியணைத்து
மகிழ்ந்தானே   கம்பன்
கள்ளில் மயங்கிக்   கள்ளக்  காதல்
செய்தான்  கண்ணதாசன்
வேலிதாண்டிக்   கூந்தல்
வாரினாரே   வாலி
ஏழைக்கும்  பாழைக்கும்
ஏற்றது செய்யென்றார்
பட்டுக்கோட்டை
உன்னிலே நெருப்பெடுத்து
கண்ணிலே  தீமூட்டினான்  பாரதி
அவன் வழி  ஏகினான்
பாரதியடிமை,  இன்னும்
 உன்னைச்   சீராக  மேவி
பாராக  அழகு  பார்த்தவர்  பலர்
வாழ்க  உன்  சீரிளமை
பெருகட்டும்  நின்  கீர்த்தி
வாழ்க தமிழே  வாழ்க

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக