அலையாய்த் தவழும் முகிலே
எங்கே ஓடுகின்றாய் உனக்கும்
நிம்மதியாய் உயிர்வாழ ஓர்
நிரந்தர இடமில்லையா
ஈழத்து அகதிகள் போல் ஓடுகின்றாயே
எங்கே எதைப்
பார்த்து ஓடுகின்றாய்
யார் உன்மீது கொலைவெறி கொண்டார்
ஓடு ஓடு நீ ஓடிக் களைத்து
வியர்வை கொட்டினால்த்தானே
இங்கே நாம் உயிர்வாழ முடியும்
இங்கே நம்மவர்கள் கொட்டும்
வியர்வையினால் ஊரில் அடுப்புகள்
எரிவதுபோல் .
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக