செவ்வாய், 16 செப்டம்பர், 2014

அனா  அந்தப்  பறவைகள்  பற்றி  ஆராய்ச்சி  செய்ய  அன்று  தமிழக  வானூர்தி  நிலையத்தில்  கால் பதித்தாள்   மோசமான  நச்சுக்  காற்றுப்   பரவி  பல  ஊர்களில்  மக்கள்  இறப்பதாக   வந்த  செய்தி
உலகம் பூராகப்   பரவியதையிட்டு  அதற்கான  காரணத்தைக்  கண்டு பிடித்து  மக்களைக் காப்பாற்ற வேண்டும்  என்ற பொறுப்பை  அமெரிக்காவில்  இருக்கும் அந்த  அறிவியல்  ஆராய்ச்சிக்  கழகம்  எடுக்கின்றது  அதன்  முதற் கட்டமாக  அனாவுடன்  அறுவர் அடங்கிய  குழு  இந்தியா  வந்துள்ளது
அனாவுக்கும்  மற்றவர்களுக்கும்  தமிழ் நாட்டில்  தமிழ்   படிக்கவேண்டும்  என்று  கட்டளை  இடப்படுகின்றது  காரணம் அவர்கள்  நேரடியாக  ஊர் மக்களுடன்  பேசி செய்திகளை  அறியவேண்டும்  என்பதனால் , ஆறுமாதங்கள்  மொழியை  படித்து  தேறுகின்றார்கள்
அந்த  ஆராய்ச்சிக் குழுவினர்.   அனா  ஒரு  கலப்பினத்தில் பிறந்தவள்  தந்தை ஆபிரிக்கர்
தாய்  அமெரிக்கர்  அவள்  கல்விகற்ற  நாட்களில்  நிறைய  இந்தியப் பிள்ளைகளுடன்  பழகியதால்
 இந்தியர்கள் மீது பெருமதிப்பு வைத்திருந்தாள் .

சிலோபியா   என்ற  பறவையினம்  ஒரு  அதிவிசேட  சக்தியினைக்   கொண்டிருந்தது  விச ஜந்துகளினை
வேட்டையாடி  அதன் நஞ்சினை  தனக்குள் இழுத்து  பின்னர்  காற்றில்  கக்கிவிடும்  மாயப்பறவை
ஒரே  முறையில் 100குஞ்சுகளைப் பெறும் பறவையினம்  இதனால்  இந்தியா  பெரும்
தொந்தரவில்  தத்தளித்தது  ஆய்வாளர்கள்  இரவு பகலாக  மக்களை  காக்கப்   போராடினார்கள் 
எல்லோருக்கும்  முகமூடியுடன்  சேர்த்து  ஒட்சிசன்  பைகளைக்   கொடுப்பது  சாத்தியமாகவில்லை
காரணம் சனத்தொகை அதிகம்  கொண்ட நாடாக  இருப்பதனால் ,  அந்த  முகமூடிகளும்  அதிக  விலை 
பெரும்  பணக்காரர்கள் மட்டுமே  வாங்கிப் பாவிக்கக் கூடியதாகவிருந்தது

அனாவுடன்  சேர்ந்து   ஆராய்ச்சிப் பணியில்  இந்தியர்களும்  ஈடுபட்டார்கள்  அதிலே  ஒருவன்  ஜெம்நாத்   அனாவுடன்  பழகியதில்  அவனுக்கு  அவள்மீது  காதல் உண்டானது ஆனால்
செம்மை தனது  மகளுக்கு  கட்டிவைக்கவேண்டும்  என்ற ஆசையில்  அவனை  எடுத்து
வளர்த்த  மாமனார்  குறியாகவிருந்தார்  தன்  மகளையே  ஜெம்  கலியாணம்  செய்வான் என்பது
மாமனார் பரமசாமியின்   திடமான  நம்பிக்கை.  ஒரு விபத்தில்  பெற்றோரை
இழந்தபின்  அவனது  மாமனாரே  அவனை  ஆளாக்கினார்   தனது  ஆளுமைக்குள்  வளர்ந்தவன்
தனது சொற்படியே  நடப்பவன்  திருமண  விடயத்திலும் அப்படியே  இருப்பான் என்று  நம்பிய
பரமசாமியின்   நம்பிக்கையில்  மெல்லிய  வெடிப்புகள்  ஏற்பட்டுக்கொண்டிருந்ததை  பரமசாமி
அறியவில்லை

ஜெம்மின்  நண்பன்  கந்தா  ஒரு  பெரிய  வியாபாரி  அவரின்  மகள் 
சிரிசா  அற்புதமாகப்  பாடும் குரல்கொண்டவள்  ஒரு நாள்  கச்சேரியொன்றை   முடித்து  வீட்டுக்கு வந்தவளுக்கு   ஒரு  தொலைபேசி  அழைப்பு வருகின்றது  உனது  அப்பாவை  கடத்தி வைத்திருக்கின்றோம்   5 கோடி  ரூபாவை  எடுத்துக்கொண்டு நாங்கள்  சொல்லும்  இடத்துக்கு
வா என்கின்றார்கள் குண்டர்கள் - தந்தையின்  பெட்டகத்தைத் திறந்து  பணத்தை  எடுத்துக்கொண்டு  புறப்படத் தயாரான  நிலையில் மறைந்திருந்து  கவனித்த  வேலைக்காரி  சினா  அந்தப் பணத்தை  சுருட்டத்   திட்டம்  போடுகின்றாள் தனது  காதலனிடம் (பக்சி) பக்கத்து  சந்திலிருந்த  நம்பிக்கையான ஒருவனிடம் சொல்லியனுப்பி விடயத்தைத்  தெரிவிக்க  அவன்  சிரிசாவைத்  தொடர்கின்றான் கந்தா  ஒருவாறு  தப்பித்து  ஓடிவந்து  ஒரு  கோட்டலில்  சென்று  ஒரு  தொலைபேசி  அழைப்பை மகளுக்கு  விடுக்கின்றார்  தான் தப்பிவிட்டதாகவும்  நீ  அந்த இடத்துக்குப்   போக வேண்டாம்  கொட்டல்  மதுரம்  வந்து சேர்  என்கின்றார்  கார்  கொட்டல்  மதுரம் வர  கந்தா  காரில் ஏறிப் புறப்படுகையில்  பக்சி  தனது  ஆட்களுடன்  கந்தாவின்  காரை மறித்துக்   கடத்துகின்றான்
உனக்கு என்ன வேண்டும் என  கந்தா  கேட்க  பணம்  வேண்டுமென்று பக்சி சொல்கின்றான்     பணத்தை  தருவதாக  ஒப்புக்கொண்டவர்  தன்னை  பணம்  கொடுத்ததும்   விடுவிக்க வேண்டுமென்கின்றார்உடன்பட்ட   கந்தா  பணத்தைக்  கொடுத்துவிட்டு மகளுடன்  வீட்டுக்கு வந்து சேருகின்றார்  உடனடியாக  தனது  அடியாட்களிடம்  விபரம் சொல்ல  அடியாட்கள்  சொன்ன குறிப்புகளை வைத்து  பக்சியை தேடிப்பிடிக்கின்றார்கள் ,  பக்சி  காசைக்கண்டவுடன்   கூட வந்தவர்களுக்கு  சில்லறைகளைக்கொடுத்துவிட்டு  தாசி வீடு  சென்று  கள்ளுக் களிப்பில்  இருக்க  அங்கே  வந்த  கந்தாவின் அடியாட்கள்பக்சியை  போட்டுத்தள்ளிவிட்டு  காசுப் பெட்டியை  எடுத்துக்கொண்டு  சென்று  கந்தாவிடம் கொடுக்கிறார்கள்  மகிழ்ந்த  கந்தா  அவர்களுக்கு  இறாலை  வீசிவிட்டு  மகிழ்கின்றார்
நிறைய குடித்துவிட்டு  தற்பெருமை பேசிக்கொண்டு  இருந்த  கந்தாவைத்   திடீரெனப்   பின்பக்கம் வந்து  அடித்துக்  கொல்கின்றான்  அடியாட்களில்  ஒருவனாக வந்தவன்  வீட்டிலிருந்த பணத்தை  எடுத்துக்கொண்டு  செல்கின்றான்  இந்த  நேரத்தில் நண்பன்  கந்தாவைத் தேடி  ஜெம் வருகின்றான்
உள்ளே நுழைந்தவனுக்கு  அதிர்ச்சி நண்பன்  கந்தா  இறந்து கிடப்பதைக்கண்டு  திடுக்கிட்டான் 
போலீசுக்கு  தகவல் கொடுத்தான்  கீழே  இறங்கி வந்த  சிரிசாவுக்கு  விபரம்  சொல்ல  வீடே
சோகம் கொள்கின்றது   வேலைக்காரி  ஒன்றுமே  அறியாதவளாய்  நின்றாள்
போலீஸ் வந்து  அனைத்தையும் விசாரித்துவிட்டு   வேலைக்காரியைக்  கூட்டிச்சென்று  தங்கள்
வழியில்  விசாரிக்க  வேலைக்காரி  சகலதும்  கக்கினாள்  உனது  காதலன்  இறந்துவிட்டான்  என்ற செய்தியை   போலீஸ்  சொன்னதும்  சினா  கதறினாள்  காவலர்கள்  அவளைச்   சிறையில்  தள்ளினார்கள் 

சிரிசாவின்  உறவினர்கள்  வந்து  நன்றாகத்  தின்று  குடித்து  அனுபவிப்பது  ஜெம்முக்கு 
பிடிக்கவில்லை  சிரிசாவிடம்  எடுத்துச்சொல்லியவனுக்கு  உள்ளே  ஒரு  புதிய  நரிச்சிந்தனை
ஓடியது  இவளைக் கலியாணம்  செய்தால்  சொத்துக்களை  அடையலாம்  என்று சிந்தித்தான்
ஆகவேண்டிய  காரியங்களைச்  செப்பமாகச்  செய்து  சிரிசாவை  மணந்தான்  அமெரிக்கக் காரியை
கைகழுவிவிட்டான்  விடயமறிந்த  பரமசாமி  கடுங் கோபத்துடன்  சென்றார்  அவரை  நல்லபடி
சமாதானம் செய்து  திருப்பியனுப்பிவிட்டான்  ஜெம் -  ஜெம்மின்  பொய்யுரைகளை  நம்பி
சொத்துக்கள் ஒவ்வொன்றையும் அவனின்  பேருக்கு  எழுதிவைத்தாள்   சிரிசா,  ஜெம்  ஆராயச்சியில்
இருந்து விலகி  சொதுக்களை மேலும் மேலும்  கூட்ட   வியாபாரத்தில்  அக்கறை காட்டினான்
பறவை  ஆய்வில்  புதிய  மருந்தை கண்டுபிடித்து  அந்த  பறவையினம்  இல்லாதுபோக  அனா
கெட்டித்தனத்துடன்  ஈடுபட்டு  அரசின்  பாராட்டை  பெற்று  நாடு திரும்பினாள்
ஜெம்முக்கு  வியாபார   எதிரிகள் நிறைந்தார்கள்  மற்றவர்களின்  வியாபாரங்களை  தானே 
செய்து அதிக  இலாபமீட்டுவது  மற்றவர்களுக்கு  தடையாக  இருந்தது  ஒருநாள்  ஜெம்
கடத்தப்பட்டு  கட்டிவைக்கப்படுகின்றான்  சிரிசா  விடயமறிந்து  போலீசுடன் வந்து காப்பாற்றுகின்றாள்  தனது  பணமோகத்தை  துறந்து   சொத்துக்களை மீண்டும் சிரிசா  பெயருக்கு  எழுதிவிட்டு  தல
யாத்திரைக்கு  புறப்படுகின்றான்  ஜெம்  பணவாசை  நீங்க  மனிதனின்  உள்ளம்  புனிதமாகின்றது
தப்புகள்  செய்வதிலிருந்து  நீங்கி  நல்லதை  செய்ய  உள்ளம்  பிரியப்படுகின்றது  என்பதை
உணர்ந்து  மனைவியுடன்  சேர்ந்து  இல்லாதவர்களுக்கு  உதவ  ஒரு  சங்கம்  உருவாக்கி 
உதவி  வாழ்கின்றான்  மனிதனாக  அவனது  நல்ல செயல்கள் கண்டு  மாமனாரும்  கோபம் நீங்கி
உறவுகொள்கின்றார்  அனைத்தும்  சுபமாகின்றது  .





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக