அதை நினைத்தால் நிம்மதி
நெருப்பும் ஏக்கமும் நீர்மையும் உள்ளே வைத்து வளரவிட்டான்
குழவியாக இருக்கையிலே வயிறு சம்பந்தமாகவே அழுகை
வளர்ந்த பின்னோ நிறைய விடயங்களுக்கு அழுகை
நாலுபேர் மதிக்க வாழ் என்பதும் காசை அத்திவாரமாகக் கொண்டே
சொல்லும் சொல் - எத்தனை அறிவாளியாகவிருந்தென்ன
காசு இல்லையென்றால் மதிப்பு மரியாதை இல்லை.
அறிவின் கரைகளை அடைத்து தம்மை கோபுரமாக்கியவர்களே காசைக் கருதாது
அறிந்தவரின் மேன்மையைப் போற்றுவர்.
நம்மை நாம் சமாதானம் செய்யச் சொல்லும் வார்த்தைகளும் கூத்தாட்டு அவைக்குழாமே
நிஷாத குணத்துக்கு மனிதன் மறுமலர்ச்சி இன்னும் கொடுக்கவில்லை
ஒரே ஒரு மகிழ்வு பாதகச் செயல்களில் ஈடுபடாது பண்புடன் வாழும் அறிவைக்கொண்டதும்
பாதகச் சூழல்களில் மாட்டி நோவு பாடாததுமே இப்போதைக்கு வாழ்நாளின் பெரும் பயன்
அதை நினைத்தால் நிம்மதி
ம.இரமேசு
நெருப்பும் ஏக்கமும் நீர்மையும் உள்ளே வைத்து வளரவிட்டான்
குழவியாக இருக்கையிலே வயிறு சம்பந்தமாகவே அழுகை
வளர்ந்த பின்னோ நிறைய விடயங்களுக்கு அழுகை
நாலுபேர் மதிக்க வாழ் என்பதும் காசை அத்திவாரமாகக் கொண்டே
சொல்லும் சொல் - எத்தனை அறிவாளியாகவிருந்தென்ன
காசு இல்லையென்றால் மதிப்பு மரியாதை இல்லை.
அறிவின் கரைகளை அடைத்து தம்மை கோபுரமாக்கியவர்களே காசைக் கருதாது
அறிந்தவரின் மேன்மையைப் போற்றுவர்.
நம்மை நாம் சமாதானம் செய்யச் சொல்லும் வார்த்தைகளும் கூத்தாட்டு அவைக்குழாமே
நிஷாத குணத்துக்கு மனிதன் மறுமலர்ச்சி இன்னும் கொடுக்கவில்லை
ஒரே ஒரு மகிழ்வு பாதகச் செயல்களில் ஈடுபடாது பண்புடன் வாழும் அறிவைக்கொண்டதும்
பாதகச் சூழல்களில் மாட்டி நோவு பாடாததுமே இப்போதைக்கு வாழ்நாளின் பெரும் பயன்
அதை நினைத்தால் நிம்மதி
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக