நவராத்திரிக்கான முதல் இதழ்நாளாமின்று
அன்று பாடசாலையில் 10 ஆம் நாள்
விஜயதசமி விழா ஒலிபெருக்கி கட்டி
வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்ட
நினைவுகள் வந்து மகிழ்த்துது என்றாலும்
நெஞ்சில் சில நோக்களும் முகிழ்க்கின்றது
வீட்டில் நவ தானியங்கள் வைத்து அம்மா
அவல் சுண்டல் வடை பாயாசம் பொங்கல்
என்று நாக்குக்கு மகிழ்வூட்டினார்கள்
இன்று எனது அடி நெஞ்சில் ஒரு சோகம்
ஆதவன் குத்துக்கு அஞ்சாது முதுகு
வளைத்து வேகி வேகி உழைத்த
பொன்னுத்தாய்க்கும் பெரியசாமிக்கும்
பொங்கவும் உண்ணவும் வெள்ளைச் சாமிகள்
நல்ல சன்மானம் வழங்கியிருக்கக்கூடாதா
நாளெல்லாம் கறுத்து தங்களை வெளுத்தவர்களுக்கு .
அங்கும் கறுத்தச் சிறுவர்கள் இருந்திருப்பர்
ஊரின் சுற்று மதில் வீட்டில் கிளிச்சிறைக்
குழந்தைகள் கொண்டாடி மகிழ்வதைப்
பார்த்து நெஞ்சம் வெடித்திருப்பர் ,
உள்ளுக்குள் தேம்பியபடி அந்தக்
கிழிந்த பாய்களை ஈரமாக்கியிருப்பர்
எவர் நினைத்தார் அந்தக் குடில்களுக்குள்ளும்
இதயங்கள் இருக்குமென
அணைக்க ஒரு அன்னை தெரேசா இல்லாத
யாழ்ப்பாணம் - ஊரெங்கும் உயர்ந்த சிரிப்பு
அது ஏழைக்குக் கிட்டாத கொப்பு .
ம.இரமேசு.
அன்று பாடசாலையில் 10 ஆம் நாள்
விஜயதசமி விழா ஒலிபெருக்கி கட்டி
வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்ட
நினைவுகள் வந்து மகிழ்த்துது என்றாலும்
நெஞ்சில் சில நோக்களும் முகிழ்க்கின்றது
வீட்டில் நவ தானியங்கள் வைத்து அம்மா
அவல் சுண்டல் வடை பாயாசம் பொங்கல்
என்று நாக்குக்கு மகிழ்வூட்டினார்கள்
இன்று எனது அடி நெஞ்சில் ஒரு சோகம்
ஆதவன் குத்துக்கு அஞ்சாது முதுகு
வளைத்து வேகி வேகி உழைத்த
பொன்னுத்தாய்க்கும் பெரியசாமிக்கும்
பொங்கவும் உண்ணவும் வெள்ளைச் சாமிகள்
நல்ல சன்மானம் வழங்கியிருக்கக்கூடாதா
நாளெல்லாம் கறுத்து தங்களை வெளுத்தவர்களுக்கு .
அங்கும் கறுத்தச் சிறுவர்கள் இருந்திருப்பர்
ஊரின் சுற்று மதில் வீட்டில் கிளிச்சிறைக்
குழந்தைகள் கொண்டாடி மகிழ்வதைப்
பார்த்து நெஞ்சம் வெடித்திருப்பர் ,
உள்ளுக்குள் தேம்பியபடி அந்தக்
கிழிந்த பாய்களை ஈரமாக்கியிருப்பர்
எவர் நினைத்தார் அந்தக் குடில்களுக்குள்ளும்
இதயங்கள் இருக்குமென
அணைக்க ஒரு அன்னை தெரேசா இல்லாத
யாழ்ப்பாணம் - ஊரெங்கும் உயர்ந்த சிரிப்பு
அது ஏழைக்குக் கிட்டாத கொப்பு .
ம.இரமேசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக