திங்கள், 8 செப்டம்பர், 2014

கலிங்கத்துப் பரணிக்கு  ஒரு முடிசூட்டு

நீலம்  பொழி பரல் 
நெய்தலாள்   தாலாட்டில்
தையலவள்  மடியினிலே
கண்ணயர்ந்தனன்  காளை
கைவேல்  கொண்டார்
வந்தார் வாவென்றார்
துடித்தெழுந்தே தொடர்ந்தனன்
பகையொன்று  புகைகிறது
ஊதித்தள்ள குழலெடுங்கள்
 செப்பினான் சீலன்
சங்கு  முழக்கி
புரவிகள் பறக்க
போர் போர்
 எங்கும் புழுதி
இரத்தப்புழுதி 
 ஏந்து மாகரங்கள்
 இன்னல் துடைக்க
 தாங்கு மாபூமி
சடலங்கள்  ஏந்த 
ஆங்கோர்  நிலத்தில்
அழுகல் பொழுதில்
வீழ்ந்தனன்  வாள்வீரன் 
தரைமகள்  தன்
கொழுநன்  உடலம்
தன்னை தாங்காது 
தன்னுடலால்  தாங்கி 
விண்ணாட்டு அரைமகிளிர்
அவ்வுடலை  புணராமுன்னம்
ஆவியொக்குவாள்  பார்மின் பார்மின்

ம.இரமேசு




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக