வியாழன், 25 செப்டம்பர், 2014

இதுதான்  எங்கள்  வாழ்க்கை


அந்தப்பனையிலும்  ஒரு  அழகான  குடும்பம் 
உணர்வுடன்  குதூகலித்து  வாழந்துவந்தது
மழைக்கும்  காற்றுக்கும்  வெப்பத்துக்கும்
இடிக்கும் மின்னலுக்கும்  அந்த  ஐந்தறிவான்
வீடு  அசையாமற் கம்பீரத்துடன்  நின்றது
இப்படியான  ஒரு தருணம்  அப்பனை
தறிக்கப்பட்டது  அந்தப்பறவை தன்
தத்தும்  குஞ்சுகளுடன்  பக்கத்து
வளவில்  நின்ற  மாமரத்துக்கு
அடைக்கலம்  தேடிப் பறந்தது
கூடற்ற அப் பறவை  கிளைகளில்
குஞ்சுகளை  இருத்திவிட்டு   புதிய வீடுகட்ட
பொறுக்கி வந்த   குச்சிகளினால்
புது வீடு  கட்டத் தொடங்கியது
சில  பறவைகள்  எதிர்த்தன
குஞ்சுகளை  கொத்தித் தாக்கின
ஆனாலும் அந்தத்  தாய்  போராடி
விரட்டி  வென்றது  கூடும் கட்டியது
அதிகாலையில்  எழுந்து  பக்கத்துக்
குளத்தில்  நீராடி  குஞ்சுகளுடன்
கூட்டுக்கு வந்தது - குஞ்சுகள்
வேலைக்குச்  செல்லும் அம்மாவிடம்
அதுவேண்டும் இதுவேண்டுமென
கோரிக்கை வைத்தன  தங்கள்
மழலைக்குரலால்  ஆகட்டும் 
என்று  சொல்லியது  தாய்
இந்த  உரையாடல்   கீழ் வீட்டில்
வசித்த  ரவிக்கு  இனிமையாகவிருந்தது
அவன் தம்பி  குமாருக்கோ   தூங்குவதற்கு
இடையூறாகவிருந்தது  அவன்  எழுந்து
தன்  கவணையெடுத்து  கூட்டுக்குத் 
தாக்கத்  தொடங்கினான்  கற்கள்
குண்டுமழையாகப் பொழிந்தது
குஞ்சுகள்  பயந்து நடுங்கின 
குமாருக்கோ  தன்  வீரம்  கண்டு  உள்ளத்தில்
கொண்டாட்டம்   குஞ்சுகளுக்கோ
திண்டாட்டமாயிருந்தது 
இரைதேடி மீண்ட தாய்ப்பறவை 
மீண்டும்  தன்  கூட்டுக்கு  வந்த
ஆபத்தைக்கண்டு  வருந்தியது
பெரும் சிரமப்பட்டு  அந்தக் 
கல்மாரிக்குள்ளிருந்து குஞ்சுகளைக்
காப்பாற்றியணைத்தபடி  மீண்டும்
ஒரு  புதிய கூட்டைக்   கட்ட  அடுத்த  வளவில்
நின்ற புளியமரத்துக்குப்   பறந்தது  

ம.இரமேசு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக