வெள்ளி, 12 செப்டம்பர், 2014

நெஞ்சில் வஞ்சமில்லா
 அந்த  நெடுமரத்தின்  கிளைகளிலே 
குந்தி இருந்து  எதையோ  கொத்தி தின்றது
 அந்தப்பறவை உண்ட  களை
 தொண்டைக்குள்  நிற்க
 ஓடிச்சென்று கள்ளமில்லா
 குளத்தில் நீரருந்தி
மீண்டும்  நின்ற இடத்துக்கே
பறந்து வந்தது  அப்பறவை
அடைக்கலம்  கொடுத்த
கிளையில்  அசிங்கம் 
செய்துவிட்டு 
வேறோர் பெரிய மரத்துக்கு
பறந்து சென்றது பறவை

உண்டகோப்பையை 
நன்றாகக்   கழுவாதவர்கள்
காரியம் முடிந்ததும் டாட்டா
இம்மியளவும் நெஞ்சில்  நன்றியில்லை
பண்பாடா அது  எத்தனை காசு

சந்தியில்  நின்று
உலகை மாற்றும்  வாயாடிகள்
வாழ்தல் என்பதை  முழுதாக
ஒரு கணமும்  அறியார்
நஞ்சு  தரும் நாகங்கள் என்றறிந்தும்
பசுவாகி  பால்வார்ப்போர் பெருங் குணம்
பேதைகள்  அறியார் .

ம.இரமேசு



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக