கோமாளிகள்
வண்ணக் கதிரொன்று வடிவாய் வளரும் வேளையிலே
கொள்ளை மழையொன்று குழப்பி ஒழித்ததுவே
சின்னப்பூவெல்லாம் சிறு நெருஞ்சி முள்மீது சிதைந்தது போல்
உள்ளப் பெருங்கோயில் கள்ளர் வசமாகி களையிழந்ததுவே
உண்மைத்தென்றலை உயிருள்ள ஓவியத்தை புல்லர்
கூட்டமொன்று புதை குழியில் தள்ளினரே
வெள்ளை மனமெல்லாம் சேறு பூசிய சின்னவர்கள்
பிள்ளைத்தமிழின் கழுத்தறுக்க துடித்தனரே
சாமி சிலை செய்து கோவில் திறந்து வைப்பார்
வீதி வலம் வந்து வேடிக்கை காணச் செய்வார்
ஏழை உதவி கேட்டால் உள்ளத்தை பூட்டி வைப்பார்
குணமில்லா கோவேறிக் கால்நடைகள் தம்மை
கோபுரத்து கலசமென்று கடலைபோல் பொங்குகிறார்
பொல்லாதா போக்கிரிகள் பணம் நாடும் செம்மறிகள்
குணமில்லா கோமாளிகள் கோமாளிகள்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக