நல்ல சமர்காலம் அன்றுதான் இலங்கையிலிருந்து ராமுவின் அம்மா டென்மாக் வரும் நாள் முப 11:15 க்கு பிலூண்டில் வானூர்தி வருகின்றது - பிலூண்ட் செல்ல ராமுவும் மனைவியும்
மகனும் மகளும் ஆயுத்தமாகின்றார்கள்
காட்சி 1
ராமு - இஞ்சேரப்பா இண்டைக்காவது நான் சொல்றதை கேளும்
தயவு செய்து உந்த பதினொண்டை கழட்டிப்போட்டு சீலையை
கட்டும் அம்மாவயல்லே கூட்டி வரப்போறம்
சீதா - ஏனப்பா இதுக்கு என்ன
ராமு - என்னவோ முதல் முதலா மருமேளை காணேக்கை நீர் சீலையோட நிண்டாத்தான்
அவவுக்கு சந்தோசமாயிருக்கும் அவையள் அந்தக்கால பண்பாடான ஆக்கள்
சீதா - அப்ப எனக்கு பண்பாடு தெரியாது அப்பிடித்தானே
ராமு - ஐயோ கடவுளே இப்ப ஆர் சொன்னது உமக்கு பண்பாடு தெரியாதெண்டு
ப்ளீஸ் ரைற்று அண்டெர்ஸ்ராண்ட் மீ
மாலா (மகள் ) - ஏனிப்ப சண்டை பிடிக்கிறியள்
சீதா - ஒரு சண்டையுமில்ல நீ போய் கெதியில வெளிக்கிடு
ராமு - பிள்ளை பாட்டிய கூப்பிடப்போரம் ஜக்கோ ஜிக்கோ உடுப்பெல்லாம் போடாமல்
பஞ்சாபி அல்லது சுடிதாரை போட்டுக்கொண்டு வாங்கோ
மாலா - சரியப்பா
ராமு - என்ரை செல்லம் நீதான் என்ட சொல்லை கேக்கிற அச்சா குட்டி
பரஸ் (மகன் ) - அப்பா காருக்கு பெட்ரோல் அடிக்கவேணும்
ராமு - நீங்கள் போய் பெட்ரோலை அடிச்சுக்கொண்டு வாரியளே இஞ்சையிருந்து சரியா 10 மணிக்கு கிளம்பவேணும் இப்ப நேரம் 9:20
பரஸ் - சரியப்பா
காட்சி 2
பெட்ரோல் நிலையத்தில் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு
பரஸ் காருக்குள் ஏறி வீடு செல்ல காரை ஸ்டார்ட் செய்கின்றார்
கார் கண்ணாடியை தட்டி 2பேர்
எ - ஐசே உம்மோட ஒருக்கா கதைக்கோணும் வெளியில வாரீரே
ப - அவசரமா போகவேணும் நேரமில்லை
இ - ஏன் நீர் இப்ப விளையாட வாறேல்ல
ப - எல்லாம் இன்னொரு நாள் கதைப்பம் என்றுவிட்டு
பரஸ் காரையோட்டி வீடு செல்கிறார்
எ - ஜாக்ற்றுக்குள்ளாலை ஒரு பியர் போத்திலை எடுத்து பல்லால் மூடியை திறந்து
ஒரு முறடை குடித்துவிட்டு இ இடம் தூசணம் பேசிக்கொண்டு சொல்கின்றான்
உவனுக்கு சாத்தவேணும் தப்பிட்டான்
இ - மவன் வசமா ஒருநாள் சிக்குவான் அப்ப பாப்பம்
த பா ச கி வே இருக்கும் புதருக்குள் நுழைகின்றார்கள்
மச்சான் தப்பிட்டான் ஒருநாளைக்கு குடுப்பம் எல்லோரும் ஆமோதிக்கின்றார்கள்
மச்சான் எல்லாத்திலையும் நல்லா கலக்குறான் கவர்பண்ணி போலை எடுக்கிறான்
அப்ப நாங்கள் அடிக்கிறேல்லையே திட்டுகின்றார்கள்
காட்சி 3
மகனும் மகளும் ஆயுத்தமாகின்றார்கள்
காட்சி 1
ராமு - இஞ்சேரப்பா இண்டைக்காவது நான் சொல்றதை கேளும்
தயவு செய்து உந்த பதினொண்டை கழட்டிப்போட்டு சீலையை
கட்டும் அம்மாவயல்லே கூட்டி வரப்போறம்
சீதா - ஏனப்பா இதுக்கு என்ன
ராமு - என்னவோ முதல் முதலா மருமேளை காணேக்கை நீர் சீலையோட நிண்டாத்தான்
அவவுக்கு சந்தோசமாயிருக்கும் அவையள் அந்தக்கால பண்பாடான ஆக்கள்
சீதா - அப்ப எனக்கு பண்பாடு தெரியாது அப்பிடித்தானே
ராமு - ஐயோ கடவுளே இப்ப ஆர் சொன்னது உமக்கு பண்பாடு தெரியாதெண்டு
ப்ளீஸ் ரைற்று அண்டெர்ஸ்ராண்ட் மீ
மாலா (மகள் ) - ஏனிப்ப சண்டை பிடிக்கிறியள்
சீதா - ஒரு சண்டையுமில்ல நீ போய் கெதியில வெளிக்கிடு
ராமு - பிள்ளை பாட்டிய கூப்பிடப்போரம் ஜக்கோ ஜிக்கோ உடுப்பெல்லாம் போடாமல்
பஞ்சாபி அல்லது சுடிதாரை போட்டுக்கொண்டு வாங்கோ
மாலா - சரியப்பா
ராமு - என்ரை செல்லம் நீதான் என்ட சொல்லை கேக்கிற அச்சா குட்டி
பரஸ் (மகன் ) - அப்பா காருக்கு பெட்ரோல் அடிக்கவேணும்
ராமு - நீங்கள் போய் பெட்ரோலை அடிச்சுக்கொண்டு வாரியளே இஞ்சையிருந்து சரியா 10 மணிக்கு கிளம்பவேணும் இப்ப நேரம் 9:20
பரஸ் - சரியப்பா
காட்சி 2
பெட்ரோல் நிலையத்தில் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு
பரஸ் காருக்குள் ஏறி வீடு செல்ல காரை ஸ்டார்ட் செய்கின்றார்
கார் கண்ணாடியை தட்டி 2பேர்
எ - ஐசே உம்மோட ஒருக்கா கதைக்கோணும் வெளியில வாரீரே
ப - அவசரமா போகவேணும் நேரமில்லை
இ - ஏன் நீர் இப்ப விளையாட வாறேல்ல
ப - எல்லாம் இன்னொரு நாள் கதைப்பம் என்றுவிட்டு
பரஸ் காரையோட்டி வீடு செல்கிறார்
எ - ஜாக்ற்றுக்குள்ளாலை ஒரு பியர் போத்திலை எடுத்து பல்லால் மூடியை திறந்து
ஒரு முறடை குடித்துவிட்டு இ இடம் தூசணம் பேசிக்கொண்டு சொல்கின்றான்
உவனுக்கு சாத்தவேணும் தப்பிட்டான்
இ - மவன் வசமா ஒருநாள் சிக்குவான் அப்ப பாப்பம்
த பா ச கி வே இருக்கும் புதருக்குள் நுழைகின்றார்கள்
மச்சான் தப்பிட்டான் ஒருநாளைக்கு குடுப்பம் எல்லோரும் ஆமோதிக்கின்றார்கள்
மச்சான் எல்லாத்திலையும் நல்லா கலக்குறான் கவர்பண்ணி போலை எடுக்கிறான்
அப்ப நாங்கள் அடிக்கிறேல்லையே திட்டுகின்றார்கள்
காட்சி 3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக