திங்கள், 23 பிப்ரவரி, 2015

யாழ் இந்துக்கள் (பிராமணர் தவிர்ந்த)  மச்சம் சாப்பிடுபவர்கள் என்பதால்  இந்திய இந்துக்கள்  (பிராமணர்கள்)  ஈழ இந்துக்களை  இந்துக்களாக  மதிப்பதில்லையென,   மிக நல்ல  இருநாட்டு
சமூக  உறவுகளை  ஆராய்ந்த  அறிஞர்  ஒருவர் கூற கேள்வியுற்றேன் .  கோப்பன்ஹாகன் அகதிகள் முகாமில் இருந்த உத்தரப்பிரதேசத்து இந்திய  பிராமணர் ஒருவர்  மாட்டு மாமிசம் உண்டது கண்டிருக்கிறேன்  அவர்  சகல  மாமிசமும் உண்டார் .  அதுபோல்  யாழ் குருக்கள் ஒருவர்  கோழி  சாப்பிட்டதை  ஜெர்மன் அகதிகள்   முகாமில் கண்டேன் . பாகிஸ்தானின் தந்தை  என்றழைக்கப்படும் ஜின்னா   பன்றி இறைச்சியை மிகவும் விரும்பி  உண்பவர் என்று,  தமிழருவி மணியன் ஐயா பேச்சில் கேட்டிருக்கின்றேன் . இங்கு என்னுடன் வேலை செய்த  ஈரானியர்  பன்றி இறைச்சியை  சாப்பிட்டது  கண்டிருக்கின்றேன்.  வேறும் சில  ஈரானியர்கள் (இசுலாத்தில் பற்றில்லாதவர்கள்) முன்பு பன்றிமாமிசத்திலாலான சிப்சுகள்   உண்டதைக் கண்டிருக்கின்றேன் . ஆக  எல்லாம் நமது மனமே . மாடு தின்பவன் நாடுகளுக்கே (ஐரோப்பா, அமேரிக்கா) தொழில் செய்ய ஆசைப்பட்டு  இந்திய  பிராமணர்கள்  படையெடுக்கின்றார்கள்  நாளும் . சமயம் சொல்லி  மக்களின்  உணவு விருப்புகளை  எவரும்  தடுத்தல் ஏற்புடையதல்ல - அவனவன் வாங்கும் இறைச்சி அவனவன்  வீட்டு அடுப்புக்குள்ளே . அன்று யாகங்களுக்குள்  போட்ட  குதிரை  ஏனை  மிருகங்கள்  யாவும்  பிராமணர்களால்  உண்ணப்பட்டதாக புராணம்  சொல்வதாக  அறிஞர்கள்  கூறுகின்றார்களே ,  குசேலர்  அவலுடன்  செல்கையில்  கிருஷ்ணன் ஆமை வடை உண்டுகொண்டு  இருந்ததாக  சுலோகம்  சொல்வதாக  கதாப்பிரசங்கம்  செய்த பிராமணப் பெண்ணே  ஒத்துக்கொண்டு  கூறியதைக் கேட்டிருக்கின்றேன்.   பாகிஸ்தானில் மற்றைய முஸ்லீம் நாடுகளில் வாழும்  முஸ்லீம் அல்லாத பிற மதத்தவர்கள் ரமழான் காலத்தில்  சிரமப்படுகின்றார்கள்,   உணவு  விடுதிகள் திறப்பதில்லை   மற்று மத மக்கள்  உணவு உண்பதை முஸ்லீம்கள்  ஏற்பதுமில்லை அக்காலத்தில்.  இதுவும்  முஸ்லீம் நண்பர்களிடமிருந்து  தெரிந்து கொண்ட உண்மை,  அவ்வகையில்  அதுவும் ஏற்க முடியாது.   ஆக  எங்கு எங்கு பெரும் பான்மை இருக்கின்றதோ அங்கே அது வைப்பதே சட்டமாகின்றது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக