திங்கள், 2 பிப்ரவரி, 2015

மாறும் நாள்  வருமா  வருமா

காதல்  என்னும் உயிர்வாழ்வில்
 கலந்து வாழத்துடிக்கும்  உள்ளங்களை
 சாதியென்னும்  பிசாசைக்  காட்டி
 பிரித்து எறியாதே,  பாவமென்னும்
 பெரு மூட்டை  உன்  பிறவிமுழுதும்
  தொடரும்  இது  வாழ்வென்னும்
பாதையில் நான்  கண்ட  அனுபவம்.

சீதையவள்  சித்திரை  நிலவு
பாவையவள்  பருவம்  தீண்டியவன்
பாவ மூட்டை சுமக்காத   பசுந்தளிர்
மாலையவள்  சூடி வாழ்ந்திட
துடிக்கையிலே, கோதையவள் நிறம்
 மாசு என்று   சொல்லி
மகனை மனம் மாற்றச் செய்தாயே
சிந்தனையில்லா  சிறிய மதி மானிடரே
நீர்  மாறும் நாள்  வருமா  வருமா .

செங்கவி
ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக