அடி - தொடர் 7
நேராக அதிபர் அறைக்குள் சென்ற முத்தர் கடுங் கோபத்துடன் கேட்டார், நாதன் வாத்தியோட பேசவேணும் .
அதிபர் - ஐயா கொஞ்சம் மரியாதையா பேசவேணும் நீங்கள்.
முத்தர்- மரியாதை எங்கை ஆருக்கு எப்பிடி குடுக்கிறதெண்டு எனக்குத் தெரியும். வாத்தியை கூப்பிடுங்கோ , பிள்ளையளை நாலு விசயம் படிக்கச் சொல்லி உங்களிட்டை அனுப்பினா
அடிக்கிறது உதைக்கிறது கண்ட மாதிரி திட்டுறது பேசுறது, இதுதான் உங்களுக்கு தெரிஞ்ச மரியதையாக்கும் -பின்னை என்ன நீங்களே சொல்லுங்கோவன் என்று அதிபரைப் பார்த்து கடுப்புடன்
கேட்டார் முத்தர் .
அதிபர் - எல்லாம் கேள்விப்பட்டனான் , பிழைதான், ஐயா இனிமேல் அப்படி நடக்காது பார்த்துக்கொள்ளுறன் என்று அதிபர் சமாதானம் சொல்லவும், நாதன் ஆசிரியரை அழைத்துவர அனுப்பிய மாணவன் அவரை அழைத்து வந்து விட்டு தனது வகுப்புக்கு செல்ல, இவர்தானே
என்று கேட்ட முத்தர் புலிபோல் பாய்ந்து நாதனை தாக்கி கீழே விழுத்தி விட்டு சில தூசண
வார்த்தைகளையும் பரவி விட்டு இரத்தம் ஏறிய சிவப்புக்கண்ணுடன் பாடசாலையை விட்டு மின்னலாக வெளியேறினார் -- படிப்பிக்கிறாங்களாம் பாடம், முதல்ல வாத்தியளுக்கு சரியா
படிப்பிக்க வேணும் என்று புறு புறுத்தபடி முத்தர் தவறணை நோக்கி நடந்தார், குளிர்ந்த கள்ளால் ஆத்திரத்தை அணைக்க------
தொடரும் -------
நேராக அதிபர் அறைக்குள் சென்ற முத்தர் கடுங் கோபத்துடன் கேட்டார், நாதன் வாத்தியோட பேசவேணும் .
அதிபர் - ஐயா கொஞ்சம் மரியாதையா பேசவேணும் நீங்கள்.
முத்தர்- மரியாதை எங்கை ஆருக்கு எப்பிடி குடுக்கிறதெண்டு எனக்குத் தெரியும். வாத்தியை கூப்பிடுங்கோ , பிள்ளையளை நாலு விசயம் படிக்கச் சொல்லி உங்களிட்டை அனுப்பினா
அடிக்கிறது உதைக்கிறது கண்ட மாதிரி திட்டுறது பேசுறது, இதுதான் உங்களுக்கு தெரிஞ்ச மரியதையாக்கும் -பின்னை என்ன நீங்களே சொல்லுங்கோவன் என்று அதிபரைப் பார்த்து கடுப்புடன்
கேட்டார் முத்தர் .
அதிபர் - எல்லாம் கேள்விப்பட்டனான் , பிழைதான், ஐயா இனிமேல் அப்படி நடக்காது பார்த்துக்கொள்ளுறன் என்று அதிபர் சமாதானம் சொல்லவும், நாதன் ஆசிரியரை அழைத்துவர அனுப்பிய மாணவன் அவரை அழைத்து வந்து விட்டு தனது வகுப்புக்கு செல்ல, இவர்தானே
என்று கேட்ட முத்தர் புலிபோல் பாய்ந்து நாதனை தாக்கி கீழே விழுத்தி விட்டு சில தூசண
வார்த்தைகளையும் பரவி விட்டு இரத்தம் ஏறிய சிவப்புக்கண்ணுடன் பாடசாலையை விட்டு மின்னலாக வெளியேறினார் -- படிப்பிக்கிறாங்களாம் பாடம், முதல்ல வாத்தியளுக்கு சரியா
படிப்பிக்க வேணும் என்று புறு புறுத்தபடி முத்தர் தவறணை நோக்கி நடந்தார், குளிர்ந்த கள்ளால் ஆத்திரத்தை அணைக்க------
தொடரும் -------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக