வியாழன், 12 பிப்ரவரி, 2015

அடி - தொடர் 3

யாழ் புகையிரத நிலையம்  அடைந்த  மதியும் நண்பர்களும் , அன்றுதான் புகையிரத நிலைய  பரபரப்பைக்  கண்டார்கள். சச்சி  பயணச் சீட்டை ஐவருக்கும் எடுத்துவர  எல்லோரும் மேடைக்கு சென்றார்கள் ,  நேசன் கேட்டான்--  என்ன சனமாடா,  உவ்வளவும் எங்கையடா போகுதுகள் ?
சச்சி - சிரித்தபடி,  எங்கையாவது  கொம்பனிகளில  இங்கிலீசு படிச்ச தொழிலாளியளா  வேலை செய்வினம் , என்னது இங்கிலீசு படிச்சும் தொழிலாளியோ  என்று  நேசன்  ஆச்சரியமாகக்  கேட்டான்.
பின்ன  கொம்பனியை  தூக்கி  இந்தாபிடி  எண்டு  கொடுப்பாங்களே , அங்கை   கணக்கு பார்க்கும்
தொழிலாளிகள் ,  மேற்பார்வை செய்யும்  தொழிலாளிகள்தான்  படிச்ச  யாழ்ப்பாணத்தாரும் என்று சச்சி 
சொல்லி  முடித்தான் .  அப்ப உத்தியோகம்  என்றாங்களே  என்றான்  பகி,  அதுவும் ஒரு  தொழில்தான்
கொஞ்சம்  மரியாதைக்காக  அப்படி சொல்லுவினம்  என்றான் மதி.

இப்படி  ஐவரும்  தம்முள்  கதைத்துக்கொண்டிருக்க  ஏழுமணி   மெயில்  எறும்புபோல்  ஊர்ந்துகொண்டு வந்து நின்றது . சித்திரா  அழுதபடி  லேஞ்சியால் (கைக்குட்டை ) தனது  கண்ணீரை
துடைத்துக்கொண்டிருந்தாள்   அவள் கணவன் மனோ  சவுதிக்கு  போகின்றான்  பிரிவுத்துயர்
குறுந்தொகையை வென்று  கண்ணீரானது . இனி  ஒன்பது மாதத்தால்த்தான்  ஊருக்கு வருவார்  மனோ.
ஏற்றிய  மீன், கருவாடு , புகையிலை  ஏனைய  பொருட்களின் காசு வாங்கப்  பயணிக்கும் முதலாளிகளையும்  ஏற்றிக்கொண்டு  மெயில் மெல்ல  கோண்  எழுப்பியபடி  முன்னோக்கி நகர்ந்தது
டாட்டா காட்டும் கைகளால்  ஸ்டேசன்  நிறைந்தது  மெயில்  பிரியாவிடையுடன்  கிளம்பியது கொழும்பு நோக்கி ----

தொடரும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக