செவ்வாய், 12 மே, 2015

 ஏராளம்    ஏராளம்

வில்லெடுத்து  அம்பெய்தி  விழுத்தியது  ஒன்று  அது தமிழ்

நல்ல சொல்  மறந்து  நம் தமிழர்  வாழ்வது  என் கொல் சொல்

லொள்ளு  ஆப்பு  மச்சி   என்றெல்லாம்  எழுதுகிறார் பேசுகிறார்

பண்பில்லை  நாகரிகமில்லை  வெறுமனே  நகைச்சுவையே வாழ்

பக்குவம்  நிறையா மண்டைகளுடன்  நானே  ராசா  ராணி நினைப்பு
எழுத்துப்பிழைகள்  நிறைய  தமிழென்றால்  அவ்வளவு  அலட்சியம்

நல்லபடி சொன்னால் நீர் என்ன பண்டிதரோ என்று கேள்வி கேட்கின்றார்
தம் நிலைக்கு வெட்கிப்பது  இல்லை  விசமக்கதைகள்  ஏராளம்  ஏராளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக