புதன், 25 மார்ச், 2015

சேரன் பிறந்தமலை செங்கொடி பறந்தமலை
பாருக்கு பாடம் சொன்ன மலை
பகுத்தறிவு தந்த மலை
வேலைப் பழிக்கும் விழியார் மலை
வீறு கொண்டே விற்கொடி பறந்த மலை
காருண்ட மேகங்கள் நீர் வடித்தே
கலையின்பம் தந்த மலை
கானகப் பொழுதினிலும் வானகம்
விழித்த மலை
வேதங்கள் பிறந்த மலை பிடி வாதங்கள்
கலைந்த மலை
ஞாலத்தில் உயர்ந்த மலை ஞாயிறு
சிரிக்கும் மலை
ஓரத்தில் நின்றே ஊர்க்குருவி உலக
அதிசயமோவென விழிக்கும் ஓவ மலை
தென்றல் வந்து ஓயும் மலை தென்மலைக் குமரிகள் ஆடும் மலை
பண்டைத் தமிழின் பண்பாட்டு மலை
இன்றைக்கும் மலையான மலை எழில் காட்டி பூம் பொழில்
சுவைக்கும் எங்கள் தமிழ் மலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக