புதன், 25 மார்ச், 2015

இங்கு நெல்லின்றி ஏது ஓட்டம்


பொய் வடியாக் காடு
மெய் முட்டும் முகடு
எவ்வுயிர்க்கும் இனிய வீடு
கையும் காலும் சுழலும் ஏடு
பச்சையாடை கட்டிய பூமா தேவி
அவள் பிரசவத்தில் பொன் நெற் குழவி
அச்சிலா உலகிழுக்கும் வண்டி
அதில் எல்லோர்க்குமுண்டு பயணம்
பால் பேதம் போற்றாள்
எல்லோர்க்கும் பசியாறக் கொடுப்பாள்
தாழ்ப்பாள் இல்லாத தங்கச் சுரங்கம்
தரணிக்கு நீயன்றில் ஏது அரங்கம்
ஆதவன் உனைக் கண்டு மகிழ
அதனால் உண்டானதோ வெளிச்சம்
முதுகு வளையுமளவு சுளகு நிறைப்பாய்
கலப்படம் இல்லாத கொடுப்பனவு
கவலையில்லாத வாழ்வு
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
இங்கு நெல்லின்றி ஏது ஓட்டம்


செங்கவி
ம.ரமேஸ்
டென்மார்க் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக