செவ்வாய், 12 மே, 2015

இங்கே  ஆண்கள்  இப்போ  தனியாக  வாழவே விரும்புகின்றார்கள்  எனது நண்பர்  பெரும்  உழைப்பாளி  தனியாகவே  வாழ்கின்றார்  - நான்  கேட்டேன் நீங்கள்  திருமணம் செய்யலாமே
ஒரு பெண்ணை  என்று.   அதற்கு  அவர்  -  ஏன்  நான் நிம்மதியா  இருப்பது  உங்களுக்கு  பிடிக்கவில்லையா  என்றார் - பதிலுக்கு  நான் அப்போ  பெண்ணுடன்  வாழ்பவர்கள்  எல்லோரும்
நிம்மதி இழந்தா  வாழ்கின்றார்கள்  என்றேன்.   ஒரு அலட்சியச்  சிரிப்பு விடையாகக்   கிட்டியது.
 
வாய்  நீளம்   எங்கும்  அதிகரிப்பே  - லேடீஸ் வாயிலருந்து ஓவரா  வார்த்தைகள் வரப்படாது
என்பார்  எம் ஆர்  ராதா,   ஆனால்  அவர் பெண்களுக்காக அவர்கள் முன்னேற்றத்துக்காக  என்றும்
ஆதரவாக  என்போல்  குரல் கொடுத்தவர்  - சிங்கப்பூர்  பெண்டாட்டியானாலும்  சரி  ஜேர்மன்  பெண்டாட்டியானாலும்  சரி,    பெண்டாட்டி என்று  வந்துட்டா  அவளுகள்  வாயை
கட்டவே முடியாது  என்பார்,  நாய்  வாயைக் கட்டிய மந்திரவாதி கவுண்டமணி (படம் : ஊருவிட்டு ஊருவந்து) - அனுபவாயில்களாக வந்த  வசனங்கள்  - சில  பெண்களின்  வாயால்  தற்கொலை  செய்த  ஆண்களை    அறிவேன் -மரியாதையின்றி  வார்த்தைகள்  நச்செரிப்புகள்  அசுத்தம் - சற்று
நட்புடன்  பழகினால்  எல்லை மீறும் வாயாடித்தனம்  / சக மாணவியின் வாயாடித்தன   அலட்டல் பொறுக்க முடியாது கன்னத்தில்  அறைந்தான்  எனது  சக  மாணவ  நண்பன்.  அன்றிலிருந்து  அப்பெண்  நல்ல திருத்தம் .

அண்மையில்  ஜெர்மனியில்  கண்டேன்  அப்பெண்ணை,   பழைய  நினைவை  எண்ணிக்கொண்டோம்
அன்று  அந்த  அடி  தன்னை  சிந்திக்க வைத்ததனால்  இன்று  நல்ல படி  கணவருடன்  வாழ்கின்றாராம் .
சிலருக்கு  சாம பேத தண்டம்  உதவுகின்றது -  எனக்கு  வன்முறை பிடிக்காது . பிடித்து  வெளியில்
விடுவது  சிந்திக்க  அடங்க  . "இனிய உளவாக இன்னாத  கூறல்  கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக