திங்கள், 13 ஜூலை, 2015

விந்தை  மகிழ்வு


ஆழ்மனத்தின் விழிப்புகள்
அந்தகார இருட்டுக்களில்
நிலை குலைந்து தடுமாறும்
வேளைகளில் மனிதன் குணம் மாறும்
பூரணத்து  முழுமை
பூத விகாரம்
கண்ணும் காதும்
விண்ணை நோக்க
விழும் பனித்தி துளிகள்
நெஞ்சை நனைக்கும்
கிளிகள் பறக்கும்
காக்கைகள்  இறகடிக்கும்
வானம் மகிழும் நேரம்
ஒரு வன்மான் காட்டில்  பசியுடன்
மான் தேடும்
அந்தகார விழுமியம்
அகிலத்தை ஆட்கொள்ளும் நேரம்
புதிய பிறப்புக்கான  வெள்ளம்
அழகிய தோட்டங்களில் பாய்ச்சப்படும்
புதிய சொந்தம் பிறந்தால்
எங்கிருந்தோ வந்த  பாசம்
  மனதை  மீட்டும்
மொழி  பேச வழி  வந்த செல்வம்
வளரும் காலம்  விந்தை  மகிழ்வு.


செங்கவி
ம.ரமேஸ்
டென்மார்க்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக