வெள்ளி, 31 ஜூலை, 2015

என்ன செய்கிறோம் நாமெனத் தெரியாமல் செய்யும் இந்தப் பிள்ளைகளை இறைவா மன்னிப்பீராக
என்றார் யேசுநாதர் தன்னை சிலுவையில் அறைந்த போது.
தன்னை சுட்டவனை ஒன்றும் செய்யாதீர்கள்
என்று சொல்கையில்
சாதாரண காந்தி மகாத்மாவானார்.
தான் குண்டடிபட்ட நிலையிலும் அண்ணனைப் பாருங்கள்
என்று சுட்ட எம் ஆர் ராதாவுக்காக இரங்கினார்
எம்ஜிஆர் என்ற பொன்மனச் செம்மல்.
ஏழைகளுக்கு உதவ பொருள் கேட்ட
அன்னை தெரேசா முகத்தில் காறி
துப்பினான் ஒரு பணக்காரன், அதை
துடைத்துவிட்டு அன்னை சொன்னார்
எனக்கானதை தந்துவிட்டீர்கள் இனி
ஏழைகளுக்கானதை தருவீர்களாக.
நமக்கு தவறிழைப்பவரை
பதிலுக்கு தண்ணடிக்கக்கூடாது என்ற மாபெரும் புனித பண்பு வர அறிவில் பக்குவம் வேண்டும்
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் இறுதிவரை மகிழ்வாக இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக