இரு விழிகள் அழுவதற்கு போதவில்லை
இரு கண்கள் அழுவதற்கு போதவில்லை ஆறாய் கண்ணீர் ஓடுது
அட்டகாசங்களும் ஆய்கினைகளும் எல்லை இன்றி நீளுது ஆளுது
எத்தனை எத்தனை மனிதரை பிணமாக்கி இரத்தம் பார்த்தார்கள்
இன்னும் அடங்கவில்லை இனவெறி கொலை வெறி இரத்தவெறி
முற்றாத பிள்ளைகளை முதியோரை சாகடித்தும் முடியலை ஏடு
தொடருது கொலைவெறி இனவெறி கைது மனிதமில்லா கூடு
பக்குவமாகி பத்து நாளான பிள்ளையை நெஞ்சம்,இன்றி நீசர் நீர்
தூக்கி சென்று என்னதான் விசாரணை செய்வீரோ அம் மலரிடம்
மா பாவம் செய்யும் மா தலைவர்கள் பாபத்தை மண் தாங்காது
மனிதம் அழுகிறது உங்கள் செய்கைகள் கண்டு நீரோ களிப்பில்
நெருப்பாய் கொதிக்கிறது நெஞ்சம் கொடும் நீசர்கள் செயல் கண்டு
என்ன நினைத்து இறைவா எம்மை வாட்டி வதைக்க வழிசெய்தாய்
காட்டு மனங்கொண்டே சிலர் காணாது துடியாது தூங்கி எழுகின்றார்
தாங்க முடியவில்லை நெஞ்சம் வேதனையால் விம்முகின்றது
என்ன பாபம் செய்தாரோ தமிழர் சொல்லொணா சோகம் கொள்ள
தமிழன்னை துயிலுரித்து உதைக்கின்றார் உலகம் வேடிக்கை காண
தடுப்பவர் இல்லை காப்பவர் இல்லை கடவுளே இறங்கி வாராயோ
ஆக்கம்
வேதனையுடன்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக