புதன், 19 மார்ச், 2014

இரு விழிகள்  அழுவதற்கு  போதவில்லை 

இரு கண்கள் அழுவதற்கு  போதவில்லை  ஆறாய் கண்ணீர் ஓடுது 
அட்டகாசங்களும்  ஆய்கினைகளும் எல்லை இன்றி  நீளுது ஆளுது 
எத்தனை  எத்தனை மனிதரை  பிணமாக்கி  இரத்தம்  பார்த்தார்கள் 
இன்னும் அடங்கவில்லை  இனவெறி  கொலை வெறி இரத்தவெறி 
முற்றாத பிள்ளைகளை  முதியோரை  சாகடித்தும் முடியலை ஏடு 
தொடருது  கொலைவெறி  இனவெறி கைது  மனிதமில்லா கூடு 
பக்குவமாகி  பத்து நாளான  பிள்ளையை  நெஞ்சம்,இன்றி நீசர் நீர் 
தூக்கி  சென்று  என்னதான்  விசாரணை  செய்வீரோ அம்  மலரிடம் 
மா பாவம் செய்யும்  மா தலைவர்கள்  பாபத்தை   மண் தாங்காது 
மனிதம்  அழுகிறது  உங்கள்  செய்கைகள்  கண்டு  நீரோ  களிப்பில் 
நெருப்பாய் கொதிக்கிறது நெஞ்சம்  கொடும் நீசர்கள்  செயல் கண்டு 
என்ன நினைத்து  இறைவா  எம்மை  வாட்டி  வதைக்க வழிசெய்தாய் 
காட்டு மனங்கொண்டே  சிலர் காணாது  துடியாது  தூங்கி  எழுகின்றார் 
தாங்க முடியவில்லை  நெஞ்சம் வேதனையால்  விம்முகின்றது 
என்ன பாபம்  செய்தாரோ   தமிழர்  சொல்லொணா  சோகம் கொள்ள 
தமிழன்னை  துயிலுரித்து உதைக்கின்றார் உலகம்  வேடிக்கை காண 
தடுப்பவர்  இல்லை  காப்பவர்  இல்லை கடவுளே  இறங்கி வாராயோ 

ஆக்கம் 
வேதனையுடன் 
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக