வெள்ளி, 2 மே, 2014

மெய்சிலிர்க்க வைக்கும் டென்மார்க் இளந்தலைமுறை கலைஞர்கள்

பெருமையாக இருக்கின்றது நம் பிள்ளைகளின் கலைப்பங்களிப்புக்களும் போட்டிகளில் அவர்கள் வென்று வரும் பரிசில்களும் ஒரு புதிய மேக எழுச்சியை டென்மார்க் வாழ் தமிழர்களுக்கு கொண்டுவந்து சேர்க்கின்றது இதற்கு அடித்தளம் இட்ட மூத்த கலைஞர்களே பெரிதும் பாராட்டுக்குரியவர்கள் அந்த வரிசையில் இயல் இசை நாடகம் ஆகிய மூன்றையும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் பெரிதும் மரியாதைக்குரியவர்களே அவர்களின் வழிநடத்துதலில் பிள்ளைகள் பெரும் திறமையை உலகுக்கு காட்டி மாபெருங் கலைஞர்களாகின்றார்கள் ஒருபக்கம் திரைப்பட தயாரிப்பில் வசந்தும் அவரின் குழுவும் சலிக்காது அஞ்சாது வீர நடை போடுகின்றார்கள் மறுபக்கம் அர்ச்சனாவின் குரலில் தமிழ் குளிர்கின்றது எல்லாவற்றையும் பின்னாலிருந்து ஆசிரியர் நடத்திவைக்கும் அழகு அபாரம் என்பது அவரை உணர்ந்தோருக்கு புரியும்.

இன்னொரு பக்கம் நடிக வினோதரின் வாரிசுகள் இசை நாட்டியம் என்று ஒளிப்பதிவுடன் கண்கவரும் காட்சிகளூடாக களை கட்டுகின்றார்கள் அன்புத் தம்பி டிலக்சன் அமைதியாக இருந்துகொண்டுபாட்டால் வெற்றிக்கொடி ஏற்றுகின்றார் அவ்வாறே இளங்கோவும் நல்ல பாடகருக்கான தகுதியை உருவாக்கி வைத்துக்கொண்டிருக்கின்றார் இவர்களின் குரல்கள் தமிழுலகுக்கு வரப்போகும் பெரும் சாதனைக்குரல்களாகும் என்பதில் ஐயமில்லை இது தவிர பாடல் புனைவது படமாக்குதல் நாட்டியம் அமைத்தல் என்று சகல துறைகளிலும் நம் பிள்ளைகள் அசத்துகின்றார்கள் என்பது அவர்களின் ஆக்கங்களை காண்கையில் உணரக்கூடியதாக உள்ளது குறும்பட தயாரிப்பில் பல நகரத்து பிள்ளைகள் ஈடுபட்டு வருகின்றார்கள் பரனைட்டு என்று வழங்கும் குறும்படம் பார்ப்பவர்களை கொள்ளைகொள்கின்றது நோர்வே பட விழாவுக்கும் தகுதி பெற்று செல்கின்றது

வரவிருக்கும் உயிர்வரை இனித்தாய் படம் மூலம் ஐரோப்பாவிலிருந்து புதிய தொழில் முறை கலைஞர்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம் டெசோபன் படம்பிடிக்கும் உன்னதம் உலகு அறிய விருக்கின்றது அதுபோல் வசந்தின் இசையமைப்பும் எல்லோரையும் அசத்தும் என்பதில் மாற்று கரு இருக்க வாய்ப்பில்லை என்னடி ராக்கம்மா பாடலை வித்தியாசமாக தனது பாணியில் இசையமைத்து

அசத்தியிருக்கின்றார் அதற்கு அவர் சக்கரை தண்டா போட்டு ஆடும் ஆட்டம் திரையில் பின்னி எடுக்கப்போகின்றது என்பதை படத்தின் முன்னோட்டத்தில் காணமுடிந்தது நம்மவர்கள் செழிப்பே நமக்கு பலம் என்ற உண்மையை உணர்ந்து எல்லோரும்

நமது பிள்ளைகளின் ஆக்கங்களுக்கு கைகொடுக்க உற்சாகப்படுத்த பேதங்களை மறந்து தயார் நிலையில் இருங்கள் என்று அன்புடன் வேண்டுகின்றேன் .

அன்புடன்

ம.இரமேசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக