புதன், 30 ஜூலை, 2014

வணக்கம்   !  இக்  கதையை  நீங்கள்  நடிக்கலாம்  அல்லது  இயக்கலாம்  மக்களை  நன்கு கவர்ந்த  நகைச்சுவைக் கதை  - கதையை படித்து பலரும்  பாராட்டினார்கள் - படித்தே  இரசிக்கின்றார்கள்  என்றால்  அது  நாடகமாக அல்லது குறும்படமாக  வந்தால் நிச்சயம்  மக்கள்  இரசிப்பார்கள்  என்று எனக்கு நம்பிக்கை  உள்ளது  மிகுதி  உங்கள்  விருப்பு -  வாழ்க நலம்

உயிர்வரை இனித்தாய் புகழ் கே எஸ் துரை ஐயாவின் அலைகள் இணையப் பத்திரிகையில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்து அநேகரால் பாராட்டப்பட்ட நகைச்சுவைக் கதை , முகநூல் நண்பர்களுக்காக மறு வெளியீடு

சவத்தை வைத்துக்கொண்டு அழாமல் இருப்பானேன்.

November 7, 2011

(சின்னக்கதை)
(சிரிக்கலாம் சிந்திக்கலாம் வாரீர்)

அது ஒரு சனிக்கிழமை முற்பகல் நாலு பக்கங்களிலிருந்தும் வந்த நண்பர்கள் கதவின் மணியோசையை அழுத்த கதவு திறக்கப்பட ஒவ்வொருவரும் வீட்டுக்குள்ளே நுழைந்துகொள்கின்றார்கள் கொண்டுவந்த பைகள் வீட்டுக்கார நண்பரின்
கைகளுக்கு மாற்றப்படுகின்றது என்ன மச்சான் என்று கேட்க உள்ளே பாரன் என்று பதில் வருகின்றது பையை திறந்தால் பையுக்குள் ஆட்டு இறைச்சியும் மதுப்போத்தல்களும் உற்சாகமடைந்த வீட்டுக்காரன் இருங்கோ மச்சான் என்று கூறவும்
ஒவ்வொருவரும் மேசையை சுற்றி போடப்பட்டிருந்த கதிரைகளில் உட்காருகின்றார்கள் மதுபோத்தல்கள் மேசையின் நடுவில் வைக்கப்படுகின்றது ஆட்டு இறைச்சி சிறு துண்டுகளாக வெட்டுப்பட்டு
பாத்திரமொன்றுக்குள் பத்திரப்படுத்தப்படுகின்றது எல்லாபோத்திலையும் மேசையில வைக்காதே கொஞ்சத்தை குளிரவை என்கின்றார் குளிர்ப்பிரியர் ஐயோ குளிர்ந்ததை குடிக்க முடியாதுபல்லுகள் தாங்காது
கொஞ்சத்தை வெளியில் வை என்கின்றார் இன்னொரு மச்சான்
அப்படியே ஆகட்டும் என்கின்றார் வீட்டுக்கார மச்சான்,நீங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்த்து நானும் ஒன்று வைத்திருக்கின்றேன் என்று வீரியம் கூடிய சிவாஸ் ரீகல் என்ற பெயருடைய மது போத்தலை வீட்டுக்கார நண்பன் மற்றைய போத்தில்களின் மத்தியில் வைக்கின்றார் தானைத்தலைவனாக சிவாஸ் ரீகலும் அதனை சுற்றி நிற்கும் படை வீர்களாக கால்ஸ் பேர்க் டுபோர்க் எலிபன்ட் போத்தல்களும் மேசையில் நிமிர்ந்து நிற்கின்றன மச்சான் சாம்பல்போடும் தட்டை தா என்றுகொண்டே வெள்ளைக்காரர்கள் பற்றவைக்கும் வெள்ளைச்சுருட்டை வாயில் வைக்கின்றார் மச்சான் ஒருவர் அவருக்கு ஆதரவாக இன்னுமொருவர் சேர்ந்துகொள்கின்றார் சிறிது நேரம் வேலைத்தல விடயங்களையும்
மற்ற நண்பர்களைப்பற்றியெல்லாம் பேசிக்கொள்கின்றார்கள்

திடீரென ஒரு மச்சான் சற்று சத்தமாய் சொல்லுகின்றார்
சவத்தை வைத்துகொண்டு அழாமல் இருப்பானேன் என்று சொல்லியபடியே டுபோர்க் போத்திலஎடுத்து மூடியை திறந்து
மொட மொடவென அரைவாசியை காலி செய்கின்றார் மற்றவர்கள் கொல்லென சிரித்துக்கொண்டே தாங்களும்
விரும்பிய போத்தல்களை திறந்து குடிக்கின்றார்கள் ஒருவர் சொல்லுகின்றார் நான் என்றும் சிவனையே முதலில் கும்பிடுபவன் ஆகையால் சிவாஸ் ரீகலே போற்றி என்று சிரித்தபடியே அவரிடம் குவளை நீட்டப்பட அதற்குள் சிவாசை
ஊற்றி ஸ்கோல் என்று டேனிசு மொழியில் உற்சாகமாய் உரக்க சொல்லி உட்கொள்கின்றார்.

மச்சான் எங்கே உனது குவளை என்று வீட்டுக்கார நண்பனை கேட்க நான்சமைக்க வேண்டும் நீங்கள் அடியுங்கோ என்று அவர் சொல்ல இல்லை நீயும் எங்களுடன் அடிக்கவேண்டும் என்று அன்பு ஆறாய் ஓடுகின்றது அவர்களின் முதலாம் சுற்றில் ,
சரி எதுக்கும்
கொஞ்சமாய் விடு என்று சொல்லி தனது குவளையை கொடுக்கின்றார் வீட்டுக்கார மச்சான் .

மீண்டும் எல்லோரும் ஸ்கோல் என்று கூவி அன்பொழுக ஆரத்தழுவ கதவின் மணியோசை சிலிர்க்கின்றது
திறந்தவர்களுக்கு மகிழ்ச்சி ரெட்டிப்பாகின்றது அவர்களை விட வயதில் முதிர்ந்தவர் அவர்களின் அன்புக்கு
பாத்திரமானவர் வருகைதந்திருந்தார் - மாமா அங்கிள் என்று கத்தியபடியே அவரை அணைத்து உள்ளே அள்ளிச்செல்கின்றார்கள் அவருக்கு வசதியான இருக்கை போடப்படுகின்றது மாமா அங்கிள் என்ன குடிக்கின்றீர்கள்
என்று ஒருவர் கேட்க உடனே மாமா சொல்லுகின்றார் தம்பி மாமாவும் அங்கிளும் ஒன்று தான் ஒன்றில் மாமா
என்று கூப்பிடு அல்லது அங்கிள் என்று கூப்பிடு உடனே எல்லோரும் சிரியோ சிரியென்று சிரிப்பு

நான் காரோடி வந்தனான் சும்மா ஒருக்கா இவன் பெடியனை பார்த்துகொண்டு போவம் எண்டு வந்தனான்
என்றார் பெரியவர்- அங்கிள் குழப்பி அல்லது தேநீர் போடட்டுமோ? தேநீரை தா தம்பி என்றார் மாமா

அப்ப இண்டைக்கு பெரிய கொண்டாட்டம் போல என்று மாமா கேட்க வாழ்கையில இதெல்லாம் இல்லாமல்
என்ன வாழ்வு என்றார் ஒருவர் அர்த்த விழியுடன் உண்மையடா தம்பி ஆனா அளவுக்கு மீறி உதுகளுக்கு
அடிமையாகாமல் குடும்பத்தை கவனியாமல் இருந்துவிடக்கூடாது என்று பக்குவமாய் புத்தி சொன்னார்.

சமையலறையிலிருந்து குரல் வந்தது அங்கிள் இண்டைக்கு எங்களோட சாப்பிட்டு விட்டு
போகவேண்டும் என்று சாச்சை இல்லை நான் வீட்டை போகவேணும் அவள் காத்திருப்பாள் என்றார் மாமாஅங்கிள் .

அங்கிள் எழுந்து சமையலறைப்பக்கம் வந்து தம்பி இன்னொருநாள் பாப்பம் இண்டைக்கு நான் கட்டாயம் வீட்டுக்கு போகவேணும் என்றபடியே பிள்ளையள் அப்ப நான் போயிட்டு வாறன் என்ற
படி அங்கிள் வெளியேறினார்

அங்கிளுக்கு மனதுக்குள் பெடியளோடு குடிக்கவேண்டும் சாப்பிடவேண்டும் என்று பெரும் ஆசை இருந்தது மனைவியின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து அடக்கி வாசித்து வெளியேறியது அவருக்கு மகிழ்வினை கொடுக்கவில்லை கட்டப்பட்டிருக்கும் மாடு போன்ற வாழ்க்கையை வாழ்வதாகவே மனதுக்குள் நொந்துகொண்டார் கடும் பசியுடன் வீட்டுக்கு வந்தவருக்கு இன்னும் தனது மனைவி சமையலை முடிக்காதது கண்டு கடும் எரிச்சல் வந்தது இவ்வளவு நேரமும் என்ன செய்தாய் ஏன்
இன்னும் சமையல் முடியவில்லை என்று காரணம் கேட்க மனையாள் சொன்ன பதில் ஆத்திரத்தை
மேலும் இரண்டாக்கியது அது என்ன பதில்- இண்டைக்கு தான் தொடர் எல்லாவற்றையும் தொகுத்து போடுவார்கள் அதை பாத்து முடித்து சமைக்க நேரமாகி விட்டது என்பதே .
கடுப்பான அங்கிள்அலுமாரி
பெட்டியுக்குள் கிடந்த “றிமிமாட்டீன்” போத்தலை பாத்து சொன்னார் சவத்தை வைத்துகொண்டு அழாமல் இருப்பானேன் என்று.

எழுத்து கற்பனை
ம.இரமேசு (பரடேசியா)
06 -11 -2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக