செவ்வாய், 29 ஜூலை, 2014

கலைகள்  வியாபாரம்  ஆகாத   வரையில்  கலையினை  மக்கள்  மதிப்பார்கள்  ஏற்பார்கள்

கலைகள்  வியாபாரம்  ஆகாத   வரையில்  கலையினை  மக்கள்  மதிப்பார்கள்  ஏற்பார்கள்  இன்றும்  பழைய படங்களையும்  பாடல்களையும்  மக்கள்  மதிக்க  காரணம்  யாதெனில்  அதிலே  வியாபாரத்
தன்மை  இன்றி  கலையின்  பேராளுமை இருப்பதே - கர்ணன்   குடியிருந்தகோயில்  அடிமைப்பெண்  ஆயிரத்தில் ஒருவன்  உலகம் சுற்றும்  வாலிபன்  போன்ற படங்களை  எத்தனை  முறை  பார்த்தாலும்  அலுப்பதில்லை  காரணம்  கலை வெளிப்பாடு  அற்புதமாக  அமைந்ததே   என்று  பெண்ணை  வைத்து
மார்பையும் இடையையும்  தொடையையும்  நம்பி படமெடுத்தார்களோ  அன்றிலிருந்து  அறுத்து எறியப்பட்டது கலை எனும் அரிய பொக்கிஷம், நாலு பெண்ணை  வைத்து கவர்ச்சியாக  படம்  பிடித்து  வெளிவிடலும் விபச்சாரமே, இனி  ஈழவர்  படைப்புகள்  கலையாக  மட்டும்  வரட்டும்  -  சாமிப்படம்
வைத்து  பூசை செய்து  தொடங்கும்  படம்  எழுத்தோட்டம்  முடிந்த  கையுடன்  அருவருக்கும்  ஆபாச  காட்சிகளையே  காட்டுகின்றது  நடிகை  என்றால்  பிகினியில்  போஸ்  கொடுக்க வேண்டும்  தோலை
காட்டவேண்டும் என்ற  தவறான அபிப்பிராயம்  இளசுகள் நெஞ்சில்  குடிகொண்டு  விட்டது  அதை உடைக்க  வித்திட்டது  எங்கள்  துரையையா  படம்  உயிர்வரை இனித்தாய்  அதை  தமிழ் உலகம்  காணவேண்டும்  பின்பு  சொல்லவேண்டும் கருத்து  - வாழ்க  நலம்

ம. இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக