புதன், 30 ஜூலை, 2014

மூன்றாம் சுழிக்கு இறுத்த பதில்

வணக்கம்  ஐயா ! ஆங்காங்கே  ஒரு  சில  ஆங்கில வார்த்தைகள்  வந்தால்  பொறுக்கலாம்  கட்டுரையின்  முக்கால்  பகுதியும்  ஆங்கிலமாகவே  இருக்கின்றது  என்பதே  எனது  வருத்தம்.  உங்கள்மீது  தனிப்பட  கோபம்  இல்லை,  எனது  கருத்தை  தெரிவித்தேன்  அவ்வளவுமே.  மற்று  அடியேன்  சொல்லவந்தது  ஆங்கிலேயர்  அன்றில்  வேறு  வெள்ளையர்கள்  நாட்டில்  அவர்களின் மொழியில்  எழுதும் போது  அந்நிய  மொழியினை  கலக்க  மாட்டார்கள்,  வேற்று மொழியினை   கலந்தால்  மக்கள் கோபமுற்று வழக்கு போட்டு விடுவார்கள்,   எழுதியவர்  தண்டம்  செலுத்தவேண்டி வரும்
அன்றில்  சிறைவாசம்  அனுபவிக்கவேண்டிவரும், சில ஆண்டுகள் முன்பு ஜெர்மனியில்  ஒரு எழுத்தாளர்  அந்நிய வாத்தையை  எழுதியதால்  சிறை சென்றார் என்பது நினைக்கத்தக்க .  ஆங்கில  மோக  அடிமைத்  தனத்தில்  வாழும்  தமிழ் நாட்டினரை  உங்களைப்  போன்ற நல்ல எழுத்தாளர்கள்  அவர்களை  அந்நிய மோகத்திலிருந்து மீட்டு எடுக்க வேண்டும்,  இப்படியே  மொழிப்பற்று  இன்றி  ஒவொருவரும்  கவனமின்றி   இருந்தால்  நாளை அம்மா  என்ற  சொல்லுக்கே  அகராதியை  புரட்டவேண்டியிருக்கும் - தமிழர்கள்தான்  தமிழுக்கு கொடி பிடிக்கவேண்டும்  நண்பர்களே, மாற்றான் வந்து கொட்பிடிக்க்மாட்டான் உணர்க .  தங்கள் மொழியின் மீது எத்தகைய  பற்றுதல்  வைத்திருக்கின்றார்கள்
மற்றைய நாட்டினர் என்று  ஜப்பான்,கொரியா, அரேபிய நாடுகள்,பிரான்ஸ்  இங்கிலாந்து  ஜேர்மன்  இத்தாலி  ஸ்கண்டினேவிய ,தென்னமரிக்க  நாடுகள் என்று
சென்று பார்த்தால்  புரியவரும்.  தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிங்கிலிசு  பேசும்  மக்களுக்கு
அவை புரிய வாய்ப்பில்லையே  - எனக்கு  பதில் தரும்  வாதம்  வேண்டாம்  சொல்லிய  கருத்தை  உள்வாங்கி  சிந்தித்து  செயலாற்றுங்கள்  அடியேன் எழுதியதில்  ஐயம்  இருந்தால் நன்கு  தமிழறிந்த
ஒருவரிடம்  சென்று  எனது  கருத்தை கட்டி  விளக்கம் கேளுங்கள் . வாழ்க நலம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக