திங்கள், 14 ஜூலை, 2014

சில நேரங்களில் சில அறிவாளிகள் 

சிரித்தது வானம்  உரிமைகொண்டு அன்புகாட்டியது 
சூரியன் சினந்தது  மனதோடு கோபம் கொண்டது 
அது அகிலத்துக்கு வெளிச்சம் தரும் என்றால் 
அது  அறிவை  இருட்டாக்கியல்லவா வைத்தது 
பிந்திய  நிலவில்  சில  அநியாய  பிம்பங்கள் 
அவை அறிவாளிப்பிம்பங்கள்  ஆம்  அவைகளும் 
அற்ப விடயங்களுக்கு வானத்துடன்  நன்றியின்றி 
முறைக்கும்  நட்பை கெடுக்கும் - பறவைகள் 
அதன் கீழே  பட்டமாய் பறக்கும்  இனிய  சிலைகள் 
விலைகள்  இன்றி  விண்தொடும் நினைவுகள் 
ஆணவ  அறிவாளிகளுக்கும்  ஆற்றல்  உண்டு 
ஆனாலும் அவர்கள் வானத்தின் கீழே இருக்கின்றார்கள் 
நல்லவர் சினம் நிலையாது என்றது வானம் 
சில நேரங்களில் சில அறிவாளிகள் இல்லை 
அவர்களை என்ன பெயர் கொண்டு அழைப்பது 
என்றது பறவை  ஆத்திரம்  அறிவாளியின்  விழிகளையும் 
மறைக்கும் என்றது முகில்கள்  பயிர்கள் ஆமோதித்தன 

ஆக்கம் 
ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக