கொள்ளையடிக்கும் உந்தன் முல்லை சிரிப்பால்
என்னை மல்லிகை மணம் போல் இழுக்கின்றாயே
தேனோ நிலவோ தென்றலோ தெவிட்டாத அமுதோ நீ
மா நிறத்து மேனிக்கு காவி அணிந்த கன்னிமானே வணக்கம்
பூமணக்கும் பொன்னோ இல்லை பூமி மயக்க வந்த பெண்ணோ
நாமணக்க உன்னை கவிபாடும் நாயகன் வேதனை அறியாயோ
சேவலுக்கும் முன் விழித்து உனைக் காப்பேன் என் கண்ணே
கம்பன் பா நாண கவி புனைவேன் உன்மேல் என் பெண்ணே
ஓவலுக்கும் அடங்காது என்தாகம் நின் தேன் கூவலுக்குள் அடங்கிடுமே
தோசையுன் தேகம் என்றால் என் ஆசைதீர அனைத்துண்ண சம்மதமா
பாசையெல்லாம் பேசும் பூஜாவே உன்னை நான் தாஜா பண்ணணுமா
ஆசை நிறைவேற்றும் அன்பு ஓசை நீ அதனால் அமைதி
கொண்டது மனமே
ம.இரமேசு - தொன்மார்க்
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக