செவ்வாய், 29 ஜூலை, 2014


கொள்ளையடிக்கும்  உந்தன்  முல்லை சிரிப்பால் 
என்னை மல்லிகை மணம் போல்  இழுக்கின்றாயே 
தேனோ நிலவோ தென்றலோ தெவிட்டாத அமுதோ நீ 
மா நிறத்து மேனிக்கு காவி  அணிந்த கன்னிமானே  வணக்கம் 

பூமணக்கும்  பொன்னோ  இல்லை  பூமி மயக்க வந்த பெண்ணோ 
நாமணக்க உன்னை கவிபாடும்  நாயகன்  வேதனை  அறியாயோ  
சேவலுக்கும் முன் விழித்து  உனைக்   காப்பேன்  என் கண்ணே 
கம்பன் பா  நாண  கவி புனைவேன்  உன்மேல்   என் பெண்ணே  


ஓவலுக்கும்  அடங்காது  என்தாகம் நின் தேன் கூவலுக்குள்  அடங்கிடுமே
தோசையுன்  தேகம் என்றால்  என் ஆசைதீர  அனைத்துண்ண  சம்மதமா 
 பாசையெல்லாம்  பேசும்  பூஜாவே  உன்னை நான்  தாஜா  பண்ணணுமா   
ஆசை  நிறைவேற்றும் அன்பு ஓசை நீ  அதனால் அமைதி    
கொண்டது மனமே 
                                   
                       
                                    
                                       ம.இரமேசு - தொன்மார்க் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக