செவ்வாய், 1 ஏப்ரல், 2014

கலைவாணரும்  கலைஞரும் 

கலைவாணரின் படத்துக்கு  வசனம்  எழுதிய கருணாநிதிக்கு  சம்பளம் கொடுக்க வந்த  கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்   ஒரு துண்டில்  000 01 என்று எழுதி  உனக்கு சம்பளம் இதுதான் சம்மதமா  வாங்கிகிறாயா  என்றாராம்  உடனே அத்துண்டை  வாங்கிய  கருணாநிதி  அப்படியே  தலை கீழாக  மாற்றி பிடித்து  இதுதான்  என் சம்பளம்  வாங்கிக்கிறேன் என்றாராம்  அவரின்  சாமர்த்தியம் கண்டு  கலைவாணர்  அவரை கட்டியணைத்து  10 000  ரூபாவை  சம்பளமாக  கொடுத்தாராம்  1950 களில்    10 000 என்பது  இப்போ 1 கோடிக்கு  சமமாகலாம் 
சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மற்றவர்களுக்கு தீங்கு செய்யாது தன்னை நகர்த்தி வாழ்வதே உகந்தது அதிலும் வாடுவோருக்கு உதவி வாழ்வது மகத்தானது - விடுத்து ஆளுக்கு ஆள் சொல்வதை கேட்டு வாழ முயற்சித்தால் வடிவேலு மீன் கடை வைத்தது போலாகிவிடும்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும் - ஆதலால்
நாம் என்ன முயற்சிகள் எடுத்தாலும்
அமைவிற்கு ஏற்பவே எல்லாம் நடக்கும்
620 குறளின்படி வெல்லலாம் ஊழை
என்றால் அதுவே அமைவாகும்

நமது கழிவகற்றல் சிரமமின்றி நடைபெறுமாயின் அதுவே நமது வாழ்வின் பெரு மகிழ்வாகும் அதற்காக படைத்தவனுக்கு நன்றி
சொல்ல வேண்டும், என்கின்றது இஸ்லாம்
 வெறுமனே வந்த நாம் வெறுமனே செல்லப்போகின்றோம் இடையில்  நடக்கும் மாயையில் உருள்கின்றோம் அதிலேதான்  எத்தனை  எத்தனை 
 அரிதார பூச்சுக்கள்  - வறுமை தோல்வி  வெற்றி செல்வம் கார் பங்களா பணம் நகை சீட்டு காணி  வளவு தோப்பு அடிபிடி சண்டை சச்சரவு
கோள்மூட்டுதல் காட்டி கொடுத்தல் கையூட்டு திணித்தல் வாங்கல்   திமிர் அகங்காரம் ஆணவம்அலட்சியம் ஆட்சி அதிகாரம் நையாண்டி
சேட்டை நக்கல்  அவமதித்தல் பயம் ஏமாற்று சூது அபகரிப்பு ஆட்டம் பாட்டம்  விருந்து பிரயாணம் காதல் கலியாணம் பாலியலாசை இணைவு
 பிரிவு துன்பம் இன்பம் பிள்ளை அப்பா அம்மா சகோதரர்கள் உறவினர்கள் ஊரார்கள் பந்தங்கள் சொந்தங்கள்  பராமரிப்புக்கள் திருட்டுக்கள் கொள்ளைகள் கொலைகள் விபத்துக்கள்  அப்பப்பா எத்தனை எத்தனை

ஆக ஆக ஆக சிந்தித்தால்
இறுதியில் முக்கியமாக மனிதனுக்கு தேவை வயிற்றுக்கு கஞ்சி உடலை காக்க துணி படுக்க திண்ணை இத்துடன் வாழ்ந்து
இன்றுவரை அழியா புகழுடன் விளங்குபவர்களே பட்டினத்தார், விவேகானந்தர் , அன்னை திரேசா    இவர்கள் பெரும் பணக்காரர்கள்
அல்ல சேவை உண்மை நல்லொழுக்கம் என்று வாழ்ந்தவர்கள்

  எங்களால் அப்படி வாழ்வது முடியாது ஆனால்  இல்லாதோருக்கு  நண்பர்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவி கேட்க்கும் பட்சத்தில் உள்ளவர்கள்
 இல்லை என்று  பொய்  சொல்லாது உதவி செய்து வாழ முடியுமே -   சிந்தியுங்கள் நாம் உண்மையாக நல்லவர்களாக வாழ வேண்டாமா .

மாட்சியில் பெரியோரை வியத்தலுமிலவே சிறியோரை இகழ்தல் அதனிலுமிலவே
அன்புடன் 
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக