ஈழங்கண்ட ஓர் அறிஞன் அமரர் ஏ.கே. கந்தையா (காபன் கந்தையா )
தமிழ் ஈழத்துக்கு கிடைத்த மாபெரும் அறிவு பொக்கிஷம் அமரர் ஏ கே கந்தையா அவர்கள் - வேலணை மத்திய மகாவித்தியாலயம் , யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலயம் பாடசாலைகளுக்கு அதிபராக இருந்தவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் கணிதத்திலும் பெரும் புலமை கொண்டு விளங்கினார் அராலி வடக்கில் பிறந்து வட்டுக்கோட்டையில் வாழ்ந்து அமரரானார்
யாழ்ப்பாண வரைபடத்தின் மகுடமாக திகழும் அராலியில் கணபதியார் சேதுப்பிள்ளை தம்பதிகளுக்கு 1905ல் மூன்றாவது பிள்ளையாய் பிறந்தவர் அமரர் ஏ , கே .கந்தையா.
ஆரம்பக்கல்வியை துணவியூர் அமெரிக்க சேவா நிலையத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணக்கல்லூரியிலும் பயின்றார்.
பின்னர் இளவாலை ,தெல்லிப்பளை ,மாத்தறை , கல்முனை,சாவகச்சேரி , வேலணை, யாழ் மத்தி ஆகிய இடங்களில் ஆசிரியராகவும் பின் அதிபராகவும் கடமையாற்றினார்.
1945 முதல் 1950 வரை வேலணை மத்திய கல்லூரியில் முதலாவது அதிபராக திகழ்ந்தார், களுவாஞ்சிகுடி பாடசாலையில் கடமையாற்றி அவ்வூர் மாணாக்கர்களை சிறப்பு சித்திகள் அடைய வைத்த பெருமைக்கு ஆளானார்.
தமிழ் ஈழத்துக்கு கிடைத்த மாபெரும் அறிவு பொக்கிஷம் அமரர் ஏ கே கந்தையா அவர்கள் - வேலணை மத்திய மகாவித்தியாலயம் , யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலயம் பாடசாலைகளுக்கு அதிபராக இருந்தவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் கணிதத்திலும் பெரும் புலமை கொண்டு விளங்கினார் அராலி வடக்கில் பிறந்து வட்டுக்கோட்டையில் வாழ்ந்து அமரரானார்
யாழ்ப்பாண வரைபடத்தின் மகுடமாக திகழும் அராலியில் கணபதியார் சேதுப்பிள்ளை தம்பதிகளுக்கு 1905ல் மூன்றாவது பிள்ளையாய் பிறந்தவர் அமரர் ஏ , கே .கந்தையா.
ஆரம்பக்கல்வியை துணவியூர் அமெரிக்க சேவா நிலையத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணக்கல்லூரியிலும் பயின்றார்.
பின்னர் இளவாலை ,தெல்லிப்பளை ,மாத்தறை , கல்முனை,சாவகச்சேரி , வேலணை, யாழ் மத்தி ஆகிய இடங்களில் ஆசிரியராகவும் பின் அதிபராகவும் கடமையாற்றினார்.
1945 முதல் 1950 வரை வேலணை மத்திய கல்லூரியில் முதலாவது அதிபராக திகழ்ந்தார், களுவாஞ்சிகுடி பாடசாலையில் கடமையாற்றி அவ்வூர் மாணாக்கர்களை சிறப்பு சித்திகள் அடைய வைத்த பெருமைக்கு ஆளானார்.
பின்னர் மாறுதல் இடம் வருகையில் அன்னாரின் சேவையில் மகிழ்ந்த கல்முனை வாசிகள் அவரை தங்களூர் பாடசாலைக்கே நிரந்தரமாக்க அன்று மேலிடங்களில் கெஞ்சி கேட்டார்களாம் மேலிடங்கள் மறுதலித்ததனால் கல்முனை மக்கள் பெருந்துயர் கொண்டதாக செவிச்செய்திகள் .
தமிழ் ஈழத்துக்கு கிடைத்த மாபெரும் அறிவு பொக்கிசம் அமரர் ஏ கே கந்தையா அவர்கள், வேலணை மத்திய மகாவித்தியாலயம் , யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலயம் பாடசாலைகளுக்கு அதிபராக இருந்தவர்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் கணிதத்திலும் பெரும் புலமை கொண்டு விளங்கினார்,குறிப்பாக ஆங்கிலத்தில் அவருக்கு இருந்த புலமையும் ஆங்கில இலக்கிய அறிவும் அளப்பரியது என்று அவரின் ஆளுமை அறிந்தவர்கள் கூற்று.
அவரின் கையெழுத்தழகை கண்டு மெய்ச்சிய அவரின் சம கால நண்பர்கள் அவரை “காபன் கந்தையா” என்று அழைத்தார்கள்.
அவரின் அறிவுத்திறனை மெச்சி அன்று மாணவர்களாக இருந்தவர்கள் அண்மையில் அவர் நினைவலைகளை போற்றி கனடா நாட்டில் விழா எடுத்து மகிழ்ந்திருக்கின்றார்கள்.
அவர்கள் வேறுயாருமல்ல வேலணை மத்தியகல்லூரி பழைய மாணவர்களே, தங்கள் ஆசானை நன்றி மறவாது இத்தனை நீண்ட வருடங்கள் சென்ற பின்னரும் நினைவில் வைத்து போற்றும் அவர்கள்
அன்பும் பண்பும் குருபக்தியும் மிக மிக மேன்மையானது, இறுக்கமானது வலியது பெரியது.
யாழில் மட்டுமின்றி அன்னாரின் பெயரும் புகழும் அன்றைய இலங்கை கல்விமான்கள் மத்தியில் எல்லா இடங்களிலும் மல்லிகை மணமாக பரவியது என்றால் பொய்யில்லை.
கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பது போல்,கற்றவர்களை அதிகம் விரும்புவார், பெரும் கல்வியாளர்கள் ஆரவாரம் செய்யாது அமைதியாக இருப்பார்கள் நிறைகுடம் தளும்பாது என்பதுபோல் அதனால்தானோ என்னவோ திருவள்ளுவர் சொல்லியிருக்கின்றார் “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து” என்று.
அடியேன் சிறு பராயத்தில் அவர் வீட்டில் அவருடன் இருந்து சோறுண்டது என்றும் அழியாத இன்ப நினைவு, சிறுவனாக இருந்த என்னிடம் மிகவும் கனிவாக இனிதாக பேசியிருந்தது அவரின் உன்னத மகா பண்பாகும்.
அனைவரையும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் நடத்திய பெரியவரை நேசிக்காத நெஞ்சங்கள் இல்லை , எந்நேரமும் கையில் பெரிய புத்தகம் ஒன்றை ஏந்தி படித்தபடியே இருப்பார்.
மிக மிக முக்கியமான விடயங்கள் என்றாலே மற்றவர்களுடன் பேசத்தலை நிமிர்வார், தான் பிறந்த அராலி மயிலியற்புலம் கந்தசாமி கோயிலில் வருடா வருடம் அன்னதானம் வழங்கி தர்ம காரியங்களும் செய்து வாழ்ந்தார்.
தனது பிள்ளைகள் எல்லோரையும் நன்கு கல்வி கேள்விகளில் சிறப்புற வைத்தார் , அன்னாரின் மூத்த
புதல்வர் அமரர், பாலகிருஷ்ணன் பொறியாளராக விளங்கினார், இளையமகனார் ராதாகிருஷ்ணன் வைத்தியராக கனடாவில் வாழ்கின்றார்.
பேரன் வைத்திய நிபுணராக விளங்குகின்றார் , ஒருவர் கல்வியாளராக இருந்தால் அவரை சார்ந்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஊரவர்கள் என்று எல்லோருக்குமே பெருமை, இன்றோ ஈழத்தவர்கள் எல்லோருக்கும் பெருமை உண்டாகின்றது.
நம்மண்ணில் இலைமறை காயாக ஒருவர் பெரும் அறிவாளியாக இருந்தார் என்பதை அறிகையில் பெருமிதமே .
நினைவு
ம . இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக