தமிழும் ஒரு நதியே
அப்பன் தெய்வப்புலவன் வள்ளுவன் பொழிந்த தமிழ்
அன்னை ஔவை அன்பாய் சொன்ன தமிழ்
அப்பன் தெய்வக்கவிஞன் கம்பன் வரைந்த தமிழ்
அப்பன் மகாகவி பாரதி போற்றி மதித்த தமிழ்
பாரதி தாசனும் கண்ணதாசனும் பட்டுகோட்டையும் வாலியும் பாடி மகிழ தந்த தமிழ் - தேமதுர தமிழ் ஓசை திக்கெங்கும் பரவ இன்று அகிலமெங்கும் அடைந்து கிடக்கிறது அன்னைத்தமிழ் அழியாத முதுமொழி அடங்காத வீறு மொழி வேற்றாரும் பயின்று படைத்த மொழி
பாரினில் தன்னிகரற்ற தாய் மொழி என்றால் அது தமிழே.
யாருக்கு கர்வம் அதிகமென்று கேட்டால், தமிழை அதிகமாக கற்றவர்களுக்கே கர்வம் அதிகமென்பேன் அழகி தன்
அழகை நினைத்து கர்வம் கொள்வாள் அவள் கர்வம் குறிப்பிட்ட காலங்களின் பின் அடங்கிவிடும் ஆனால் தமிழ் படித்தவன் கர்வம் அவன் சிதையில் எரியுமட்டும் இருக்கும், ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட பாரதி யாம் என்று தன்னை மிதக்க விழிக்க என்ன காரணம் , யாம் என்று
பெரிய செல்வந்தர்கள் அரசர்கள் சொல்வார்கள் அப்படியிருக்கையில் பாரதி தன்னை யாம் என்று மொழிந்தாராயின் அவர் கற்று வைத்திருந்த தமிழின் வீரியமே அவரை விம்மி புடைக்க செய்தது ஆக தமிழை படித்தவன் முன்பு எவனும் இரண்டாம் படியே, தமிழே எதையும் ஆளும் திறன்கொண்டது
அதன் முன்பு எல்லாம் தோல்வியை தழுவும் அதனாலேயே தமிழுக்கு அனைத்தும் எதிராக இருக்கின்றது தமிழ் அத்தகைய ஆற்றல் கொண்டது
எந்நிலையிலும் உயிர்வாழத்தக்கது கொட்டிய குண்டுகளுக்குள்ளும் மிஞ்சியவர்கள் குடிக்க தண்ணீருமின்றி வாழ்ந்தார்களே தப்பித்தார்களே அதுதான் தமிழின் பலம் மேல்நோக்கினால் கரடுமுரடாக அழுக்காக தெரியும் ஆனால் உள்ளுக்குள் உயிரும் மெய்யுமாக ஒரு உயிர்மெய் நதி சுத்தமாக சத்தமின்றி ஓடிக்கொண்டிருக்கின்றது அது எக்காரணங் கொண்டும் அடங்காது நிற்காது ஓடிக்கொண்டேயிருக்கும் . நதி நிற்பதில்லை ஓடிக்கொண்டே இருக்கும் அதனாலேயே அதற்கு நதி என்று பெயர் தமிழும் ஒரு நதியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக