புதன், 9 ஏப்ரல், 2014

எத்தனை அறிவு இருந்தென்ன

எத்தனை அறிவு இருந்தென்ன அடுத்த வேளை சோற்றுக்கு கையில் பணம் இல்லை என்றால் அவன் முட்டாளே என்பது இன்றைய நிலை 
ஆனால் வள்ளுவன் என்ன சொல்கிறான் - பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றினை பற்றுக பற்று விடற்கு - இதன் வழி நோக்குங்கால் பணத்தை
நாடாதே ஆனால் உயிர்வாழ முடியாது பிச்சை எடுக்க நேரிடும் இதெல்லாம் மேலோட்டமாக பார்க்கையில் உண்டாகும் தெளிவு ஆழமாக நோக்கினால் அதன் வீரியம் பெரிதாகும் சகல வசதிகளுடனும் இருக்கும் ஒருவன் பேராசை பிடித்து மேலும் மேலும் என எண்ணும் வேளை அக்குறளை படித்தால் எச்சரிப்பது போல உணரலாம் - காசு சேர்க்க தெரியாதவன் முட்டாள் சேர்க்க தெரிந்தவன் அறிவாளி இதுவே இன்றைய உலக உண்மை காசே அனைவரையும் ஆளுகின்றது .அன்பு பாசம் மதிப்பு மரியாதை எல்லாம் காசால் கட்டப்பட்டுள்ளது காசு கூடக் கூட கட்டு இறுகும் காசு குறையக் குறைய கட்டு இளகும் இதுவே உண்மை ஆனால் பணத்தை மதியாது பண்பை மதிக்கும் மனிதர்களை பணம் ஒன்றும் செய்துவிட முடியாது அவர்கள் எந்நிலையிலும் மனிதனை மனிதனாகவே மதிப்பார்கள் செல்வத்தை நோக்கார்கள் அவர்களே உண்மையான ஆழ்ந்த அறிவாளிகள் அப்படியான மனிதர்கள் விரல் விட்டு எண்ணத்தக்க நபர்களாகவே நம்மவர்களில் இருக்கிறார்கள்.

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக